துர்கா ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்..!! – எல்.முருகன் வேண்டுகோள்

l murugn durga stalin

மதுரையில் இன்று முருகன் மாநாடு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டில் உட்கார்ந்து கந்தசஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்று எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முருகன் மாநாடு இன்று மதுரையில் நடக்கிறது. இந்த மாநாட்டில், பல லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த நேரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலினும் வீட்டில் இருந்தபடி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என்று எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “இன்றைக்கு தமிழகத்தில் மிகவும் முக்கியமான நாள். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் மக்கள், முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற முருக பக்தர்களுடைய மாநாடானது இன்று மாலை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மாநாட்டில் இருக்கிற பல லட்சம் பேர் இணைந்து கந்தசஷ்டி கவசத்தை படிக்க இருக்கிறார்கள். இந்த கந்தசஷ்டி கவசத்தை இங்கு வர முடியாமல் இருப்பவர்கள் அதே நேரத்தில 6 மணிக்கு அவர்கள் வீடுகளில் இருந்தே கந்தசஷ்டி கவசத்தை படிக்கிறார்கள்.

முதலமைச்சர் அவர்களுடைய மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களையும் கூட அவர்களுடைய வீட்டில் உட்கார்ந்து கந்தசஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இந்த மாநாடு தமிழக அரசியலில் அல்லது தமிழக ஆன்மீகத்தில இது ஒரு மிக முக்கியமான மாநாடு. இந்த மாநாடு தமிழ்நாடு ஆன்மீக பூமி என்பதை நிரூபிக்கின்ற மாநாடாக இருக்கிறது.

ஒரு மிகப்பெரிய வெற்றியோடு 2021ல வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம். இப்பொழுது நாம் இங்கு நம்முடைய முருக பக்தர்கள் அனைவரும் இணைந்து இந்த முருக பக்தர்களுடைய மாநாட்டை சிறப்பாக நடத்தி நடத்த இருக்கிறோம். தமிழக அரசு இந்த மாநாட்டுக்கு எந்த இடத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மாறாக தொல்லை கொடுக்கிறது. தமிழகத்தில் இதுவரை எந்த மாநாட்டுக்கும் இ பாஸ் கேட்கப்பட்டதில்லை. ஆனால் முருகர் பக்தர்கள் மாநாட்டுக்கு இ பாஸ் கேட்கிறார்கள்” என்றார்.

Read more: அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரான் அதிபருடன் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி..!!

Next Post

பார்க்கவே பதறுதே.. ஜெகன்மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கிய தொண்டன் தலை நசுங்கி பலி..!! அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..

Sun Jun 22 , 2025
ஆந்திராவில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பேரணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர் ஒருவர் வாகனம் மோதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சத்தேனப்பள்ளி அருகே, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாகன ஊர்வலம் சென்றார். அவரை வரவேற்க சீலி சிங்கையா என்ற 54 வயது நபர், கம்பியைத் தாண்டி வாகனத்துக்கு அருகில் சென்றதாகக் […]
jaganmohan reddy accident

You May Like