2-வது கணவருக்கு பிறந்த குழந்தை..!! 3-வது கணவன் செய்த பயங்கரம்..!! புதருக்குள் உடலை தூக்கி வீசிய தாய்..!! எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சோகம்..!!

Crime 2025 2

தென்காசியை சேர்ந்த கண்ணன் (25) என்பவரும், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா (25) என்பவரும் சொரிக்காம்பட்டி கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளனர். கலாசூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடிந்து விவாகரத்தான நிலையில், இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு சிவானி (2 வயது) என்ற பெண் குழந்தை இருந்தது.


இதற்கிடையே, கண்ணனுக்கும் கலாசூர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கலாசூர்யாவின் குழந்தை சிவானி தனக்குத் தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கூறி வந்துள்ளார். கடந்த மாதம் 5-ஆம் தேதி கலாசூர்யா கடைக்குச் சென்றிருந்தபோது, கண்ணன் 2 வயது குழந்தையான சிவானியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த தகவல் அறிந்த கலாசூர்யா அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி, பண்ணைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிப் புதரில் வீசிவிட்டுச் சென்றனர். பிறகு இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், கலாசூர்யா கணவனுடன் கோபித்துக்கொண்டு கேரளாவில் உள்ள தன் தாய் சந்தியாவின் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு, குழந்தை எங்கே என்று தாய் சந்தியா கேட்டதற்கு சரிவரப் பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த சந்தியா, புனலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செக்கானூரணி போலீஸாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.

காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையை அறிந்த கண்ணன், நேற்று கரடிக்கல் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர், செக்கானூரணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கண்ணன், விசாரணையில் குழந்தையை கொன்று உடலை புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். உடனடியாக கண்ணன் மற்றும் கலாசூர்யா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், போலீஸார் காட்டுப் பகுதிக்குச் சென்று தேடியபோது, குழந்தையின் உடல் அழுகி எலும்புகளாக மட்டுமே மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையின் எலும்புகளை ஆய்வுக்காக அனுப்பிய போலீஸார், தம்பதி இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ஒரே நேரத்தில் 2 பேருடன் உல்லாசம்..!! கர்ப்பமான பள்ளி, கல்லூரி மாணவிகள்..!! குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி..!! ஊட்டியை உலுக்கிய சம்பவம்..!!

CHELLA

Next Post

கிறிஸ்துமஸ் நிகழ்வில் 10 பேர் பலி..! மக்கள் கூட்டத்திற்குள் தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து..!

Sat Dec 6 , 2025
செயின்ட் ஆன்-(Sainte-Anne) என்ற இடத்தில், குவாதலூப் (Guadeloupe) எனப்படும் பிரெஞ்சு பிராந்தியத்தில், நேற்று (உள்நாட்டு நேரம்) கிறிஸ்துமஸ் விழா தயாரிப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஒருவர் வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டினார். இந்த சம்பவத்தில் மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்; அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. அவர்களில் 3 பேர் மிகக் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயரமான நிகழ்வு நகர மன்றம் […]
France accident

You May Like