தூய்மையான நகரத்திற்கான பட்டியலில் மீண்டும் இதே நகரம் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

தூய்மையான நகரத்திற்கான பட்டியலில் மீண்டும் தொடர்ந்து 6 வது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பா.ஜ.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து ஸ்வச் பாரத் என்ற பெயரில் தூய்மையான இந்தியா உருவாக்கப்பட்டு வருகின்றது.இதனால் முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்கள் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றார். அதன்படி தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற பெயரில் தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தூர் 1

கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்தி அரசு நேற்று வெளியிட்டது.

அதில் நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மத்திய பிரதேச அரசு அதிகாரிகளிடம் வழங்கினர்.இந்தூருக்கு அடுத்தபடியாக குஜராத்தின் சூரத் 2வது இடத்தையும் மராட்டியத்தின் மும்பை 3வது இடத்தையும். தலைநகர் டெல்லி 9வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் சுத்தமான நகரங்களின் பட்டியலில் பின்தங்கி உள்ளது.

Next Post

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் : நல்லகண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு !..

Sun Oct 2 , 2022
திடீர் உடல் நலக்குறைவால் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு . அவருக்கு தற்போது 97 வயதாகின்றது. நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து […]
நல்லக்கண்ணு

You May Like