“கழட்டிப்போட்ட துணி அப்படியே இருக்கு.. பக்கத்திலேயே பாம்பு சட்டை”..!! திடீரென நாகினியாக மாறிய இளம்பெண்..? காட்டுத் தீயாய் பரவிய சம்பவத்தின் பின்னணி..!!

UP Crime 2026

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் சீகன்பூர் கிராமத்தை சேர்ந்த ரீனா என்ற பெண், தனது வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவர் படுத்திருந்த இடத்தில் துணிமணிகள் மற்றும் நகைகள் அப்படியே இருக்க, 5 அடி நீளமுள்ள பாம்பின் சட்டை மட்டும் கிடந்ததைக் கண்டு குடும்பத்தினரும் கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.


சினிமா பட பாணியில், ரீனா ‘இச்சாதாரி நாகினியாக’ (மனித உருவம் எடுக்கும் பாம்பு) மாறி மறைந்துவிட்டதாக கிராம மக்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கை காட்டுத்தீயாக பரவியது. ஒரு சில நாட்களில் இந்த செய்தி சமூக வலைதளங்களிலும் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அறிவியலுக்குப் புறம்பான இந்தச் செய்தியைப் பலரும் நம்ப தொடங்கிய நிலையில், மாயமான அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு மொத்த கதையையும் மாற்றியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட ரீனா, தான் நாகினியாக மாறவில்லை என்பதையும், தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதையும் உறுதிப்படுத்தினார். வீட்டில் பாம்பின் சட்டை கிடந்தது தற்செயலானது என்றும், அதற்கும் தனது காணாமல் போனதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரீனாவின் இந்த நேரடி விளக்கத்தால், அவரைச் சுற்றி நிலவி வந்த ‘நாகினி’ வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன. தற்போது இந்தப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Read More : வெற்றி தரும் விஜய ஏகாதசி..!! இன்று இந்த பொருளை வீட்டில் வாங்கி வைத்தால் செல்வம் பெருகும்..!! விரதம் கடைபிடிப்பது எப்படி..?

CHELLA

Next Post

“சொந்தக்காரனே இப்படி இருக்கான்”..!! சிறுமிகளை சீரழித்து கர்ப்பமாக்கிய மாமா, சித்தப்பா..!! உடலை ஆற்றில் தூக்கி வீசிய கொடூரம்..!!

Fri Feb 13 , 2026
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் மர்மமான முறையில் மாயமானார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர செல்போன் அழைப்பு விசாரணையில், அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் மாமாவே (அத்தையின் கணவர்) அவரைக் கடத்திச் சென்றது அம்பலமானது. மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தை அறிந்த மாநில மகளிர் ஆணைய துணைத் […]
Child Rape 2025

You May Like