ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் படுகொலைக்குப் பிறகு இந்த மோதல் முடிவுக்கு வரும் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்களன்று ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதை நிராகரிக்க மாட்டேன் என்று கூறினார். இஸ்ரேல் “நாம் செய்ய வேண்டியதைச் செய்து வருகிறது” என்று சர்வதேச ஊடகமொன்ன்றில் தோன்றியபோது நெதன்யாகு கூறினார், மேலும் கமேனியைக் கொல்வது “மோதலை அதிகரிக்காது” மாறாக “அதை முடிவுக்குக் கொண்டுவரும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராய்ட்டர்ஸ் மற்றும் சிபிஎஸ் செய்திகளின்படி, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலை செய்யும் இஸ்ரேலின் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் முறியடித்தார். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஈரானியர்கள் இதுவரை எந்த அமெரிக்கரையும் கொல்லவில்லை என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இது நடக்கும் வரை, ஈரானின் அரசியல் தலைமையை குறிவைப்பது பற்றி நாங்கள் பேசவே மாட்டோம் என்று கூறியுள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸில் செய்தி குறித்து மீண்டும் கேட்டபோது, நெதன்யாகு, “ஒருபோதும் நடக்காத உரையாடல்கள் பற்றிய பல தவறான செய்திகள் உள்ளன, நான் அதில் தலையிடப் போவதில்லை” என்று கூறினார்.
Readmore: பெரும் பரபரப்பு.. இஸ்ரேலின் முக்கிய புள்ளியை தூக்கிலிட்ட ஈரான்..