மக்களே நாளை தான் கடைசி நாள்…! ஆதாருடன் 5 நிமிடத்தில் இணைத்து விடலாம்…! முழு விவரம் இதோ…

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம். நாளை தான் கடைசி தேதி என்பதால் ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.


ஆன்லைன் மூலம் எப்படி இணைப்பது…?

முதலில் ஆதார் எண்ணை, மின்சார எண்ணுடன் ஆன்லைனில் இணைக்க விரும்புவர்கள் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற

இணைய முகவரிக்கு செல்ல வேண்டும். அந்தப் பக்கத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவேண்டும்.

இதையடுத்து, மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட உள்நுழைய வேண்டும்.

அதை தொடர்ந்து, ஆதார் எண் எனக் குறிப்பிட்டுள்ள இடத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

பின்னர், ஆதார் கார்டு புகைப்படத்தை வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதைத்தொடர்ந்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக SMS கிடைக்கும்.

Vignesh

Next Post

அட கடவுளே...! சிறுத்தைக்கு ஏற்பட்ட சோகமான நிகழ்வு...! அதிர்ச்சியில் அதிகாரிகள்...!

Mon Jan 30 , 2023
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மேகலபாரா பகுதியில் வலையில் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் உடலை மீட்டனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் பிலிப் கூறுகையில், “இரவில் கோழிப்பண்ணையிலிருந்து சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது கோழிப்பண்ணையில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் தொங்குவதை பார்த்தேன். கோழி கூட்டில் கிட்டத்தட்ட 100 கோழிகள் இருந்தன, அதன் கால் சிக்கிக்கொண்டது. மேலும் சமீபகாலமாக […]
1146992 leopard

You May Like