தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை லாக்அப் மரணம்.. நீதிபதியை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

befunky collage 2025 06 29t142552 858 1751187381 1

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த 10 பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார்.


இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சனிக்கிழமை இரவு அஜித் குமார் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், அஜித்குமாரின் உயிரிழப்புக்கு போலீசார் தாக்கியதே காரணம் என்று அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் காவல்நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கில் திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் சம்பவம் நடைபெற்ற கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். இந்த சூழலில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் திருட்டு சம்பவம் நடைபெற்ற கோயிலில் நீதிபதி ஆய்வு செய்துவிட்டு திரும்பிய போது, அங்கு சூழ்ந்த பொதுமக்கள் அவரின் காரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது போலீசார் சம்மன் அனுப்பி அழைப்பார்கள், அப்போது கோரிக்கை வைக்கலாம் என்று நீதிபதி விளக்கம் அளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும், இளைஞரின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக இன்று இளைஞர் மரணம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது பொதுநல மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம், கடந்த 4 ஆண்டுகளில், 24 லாக் அப் டெத் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரம் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞரை விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன்? அடித்துக் கொல்லப்பட்டவர் தீவிரவாதியா? அடித்து கொலை செய்துள்ளீர்கள்? ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புகாக காவல்துறையினர் தாக்குவது இருக்கலாம்.. ஆனால் சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டவரை, அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் தாக்கியது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தலை முதல் பாதம் வரை 18 இடங்களில் காயம்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!! சிவகங்கை லாக்அப் டெத்…!

RUPA

Next Post

7 ஸ்டார் ஹோட்டல் போன்ற ஆடம்பர வசதிகள்.. இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ரயில் இது தான்.. டிக்கெட் விலை இத்தனை லட்சமா?

Mon Jun 30 , 2025
இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ரயில் எது தெரியுமா? இந்தியாவில் ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. ஏனெனில் உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்கில் இந்திய ரயில்வே 4-வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது.. பொதுவாக, இந்திய ரயில்வே என்றாலே மலிவான மற்றும் வசதியான பயணமாக கருதுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு ரயில் உள்ளது? அதில் பயணம் செய்வது ஒரு சொகுசு […]
palace on wheel images compressed 1

You May Like