வயிற்று வலி என்று மருத்துவமனை சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!! முழு கண்ணாடி டம்ளர் கண்டுபிடிப்பு…

மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்ஹர் பகுதியை சேர்ந்த முதியவர் நான்கு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். தன்னுடைய வயிற்று வலி குறித்து கிராம மக்களிடம் தெரியப்படுத்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதியவருக்கு எக்ஸ்ரே எடுத்த போது அவரது வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


கண்ணாடி டம்ளர் வயிற்றுக்குள் இருப்பது குறித்து மருத்துவர்கள் முதியவரிடம் கேட்டனர், அதற்கு அவர் சொன்ன காரணத்தை கேட்டு மேலும் அதிர்ந்தனர். நான்கு மாதங்கள் முன்பு முதியவர் அமாவதா கிராமத்திற்குச் சென்றபோது, ராதே ஷ்யாம் என்பவரின் குடும்பத்தினர் முதியவரை அடித்து நிர்வாணப்படுத்தி கண்ணாடி டம்ளர் மீது உட்கார வைத்ததாகவும், இதுகுறித்து யாரிடமும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சம்பவம் குறித்து முதியவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

’5 ஜி அலைக்கற்றை டவரால் பயங்கர ஆபத்து ’ ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்கள் எதிர்ப்பு ….

Wed Oct 5 , 2022
விருதுநகர் மாவட்டத்தில் 5ஜி அலைக்கற்றை டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணன் கோவில் பகுதி 33 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனி நபருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து […]
5 ஜிடவர்

You May Like