தேர்தல் முடிந்தது விலையும் உயர்ந்தது..!! வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்களானது பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களில் உயர்ந்து வந்தது.


பின்னர், மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் உயர்த்தாமல் ஒரே விலையிலேயே நீடித்து வந்தது. இந்நிலையில், 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ரூ.50 உயர்ந்து ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2,2268 விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

CHELLA

Next Post

மக்களே உஷார்..!! ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தால் உடனே இதை செய்யுங்க..!! நடிகரின் சகோதரர் கதறல்..!!

Wed Mar 1 , 2023
உங்கள் அக்கவுண்ட்டில் இவ்வளவு பணம் கிரெடிட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இது நம்மில் பெரும்பாலானோருக்கு அடிக்கடி வரக்கூடிய மெசேஜ்களில் ஒன்று. இப்படி மெசேஜ் வந்தால் அதை க்ளிக் செய்யக்கூடாது என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் நமது ஜாதகங்களில் கெடுபலன் உச்சத்தில் இருந்தால் அந்த எச்சரிக்கை எல்லாம் ஞாபகத்தில் வராது போலும். இப்படி ஒரு சம்பவத்தில் சிக்கியிருக்கிறார் பிரபல நடிகரின் சகோதரர். […]
iman annachi

You May Like