டப்பிங்கில் சொதப்பிய யோகி பாபு கன்னத்தில் அறைந்த பிரபல இயக்குனர்! பழிவாங்கினார் யோகி பாபு?

ஒரு திரைப்படத்தின் வெற்றி கதாநாயகர்களை மட்டும் சார்ந்தது கிடையாது. அந்த திரைப்படத்தின் நகைச்சுவை நாயகர்களையும் அந்த வெற்றி சார்ந்துள்ளது. நகைச்சுவைக்கு பெயர் போன நடிகர்களில் வடிவேலு, சந்தானம், விவேக் இவர்களின் பட்டியலில் யோகிபாபுவும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.


முதலில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த யோகிபாபு தன்னுடைய நடிப்பு திறமையின் காரணத்தாலும், அசுர வளர்ச்சியாலும் தற்போது ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்சமயம் யோகி பாபு சதுரங்க வேட்டை திரைப்படத்தின் 2ம் பாகம், ஜெயிலர், மெடிக்கல் மிராக்கிள், அயலான், சலூன், பூச்சாண்டி, தலைநகரம், பூமர் அங்கிள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் தற்சமயம் இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் தாதா திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதில் யோகிபாபுவிற்கு சரியாக டப்பிங் செய்ய வராததன் காரணமாக, தாதா திரைப்பட இயக்குனர் கிஷோர் யோகிபாபு அவர்களை அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்துடன் யோகி பாபு தாதா திரைப்படத்தில் தான் நடிக்க வில்லை என்று சமூக வலைதளத்தில் கூறியிருந்தாலும் அது தொடர்பாக எனக்கு கவலை இல்லை. ஆனால் தற்போது திரைப்படத்திற்கு பங்கம் உண்டாகும் விதத்தில் மிகப்பெரிய வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று இயக்குனர் கிஷோர் யோகிபாபு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தாதா திரைப்படம் டிசம்பர் மாதம் 9ம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில், திரைப்படத்தின் டைரக்டர் தற்சமயம் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இதில் யோகி பாபு தான் அடித்ததை மனதில் வைத்துக்கொண்டு தான் தாதா திரைப்படத்தை எந்த தயாரிப்பாளர்களையும் வாங்கவிடாமல் தடுத்து வருவதாக அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் வழங்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்திருக்கிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Newsnation_Admin

Next Post

காதலிக்க மறுத்த சிறுமியை முந்திரி தோப்புக்கு கடத்திச் சென்ற இளைஞர்... துணை போன தாய்!!! இறுதியில் காவல் துறையினர் எடுத்த அதிரடி..!

Tue Dec 6 , 2022
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற கூலி தொழிலாளி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை 10ம் வகுப்பு படித்ததிலிருந்து தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்சமயம் அந்த சிறுமி 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஜெயக்குமார் தொடர்ச்சியாக அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அந்த சிறுமியை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் […]
1008679 molest rape 02

You May Like