உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில், மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே இருந்த கள்ளக்காதல் விவகாரம், ஒரு தாயின் உயிரைப் பறித்த கொடூரச் சம்பவமாக மாறியுள்ளது. 50 வயதான கீதா தேவி. இவரது கணவர் குர்கு யாதவ். இவர்களது மகன் தீபக் வெளியில் சென்றிருந்த நேரத்தில், மாமனாரும் மருமகளும் தனிமையில் இருப்பதை கீதா தேவி கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இந்த ரகசியத்தை மகன் மற்றும் ஊர் மக்களிடம் அம்பலப்படுத்துவேன் என்று அவர் மிரட்டியதால், ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து கீதாவை கொலை செய்ய திட்டமிட்டனர். செங்கற்கள் மற்றும் மரக்கட்டைகளால் அவரது தலையில் கொடூரமாக தாக்கி, துடிக்கத் துடிக்கக் கொலை செய்தனர். பின்னர், சடலத்தை கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு, கீதா தேவி வேறொரு ஆணுடன் ஓடிவிட்டதாக மகனிடம் நாடகமாடினர்.
கொலையை மறைக்க கீதாவின் நடத்தையிலேயே பழி சுமத்திய அந்த இருவரும், அவரது பையில் சில ஆபாசப் பொருட்களை வைத்து மகனை நம்ப வைக்க முயன்றனர். ஆனால், போலீசாரின் மோப்பம் இந்த திட்டத்தை சிதைத்தது. கழிவறையில் இருந்த சடலத்தை மீட்ட போலீசார், விசாரணையில் மாமனாரும் மருமகளும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஆசையோடு போன கள்ளக்காதலி..!! சடலத்துடன் உடலுறவு வைத்த காதலன்..!! கடைசியில் மனைவி செய்த அதிர்ச்சி செயல்..!!



