‘நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்’!. இஸ்ரேலுக்கு ஈரான் புதிய ஐஆர்ஜிசி தலைவர் பகிரங்க மிரட்டல்!

mohammad pakpour iran 11zon

ஈரானின் அணுசக்தி மையம், ராணுவத் தளங்களை குறிவைத்து ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நேற்று சரமாரி குண்டு மழை பொழிந்தது. இதில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலியாகினர். பதிலடியாக ஈரானும் 100 டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்.


இந்தத் தாக்குதல்களில், ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது. அவருடன் மற்றொரு உயர் அதிகாரி மற்றும் அணு விஞ்ஞானிகளான ஃபெரிடவுன் அப்பாஸி மற்றும் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி ஆகியோரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய தளபதிகள், ஈரானின் முக்கிய தலைவர்கள் குறிவைத்து கொல்லப்பட்டதாக தெரிகிறது.

தாக்குதல்களுக்குப் பிறகு புதிய ஐ.ஆர்.ஜி.சி தளபதி பாக்பூர், இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனிக்கு எழுதிய கடிதத்தில், “இந்த சியோனிச ஆட்சிக்கு விரைவில் நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். “இஸ்லாமிய குடியரசின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பில் பயங்கரவாத சியோனிச ஆட்சி இன்று செய்த குற்றத்திற்கு நிச்சயமாக பதிலளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

புதிய ஐ.ஆர்.ஜி.சி தளபதி, இதுபோன்ற பழிவாங்கல் நாட்டின் தலைவரின் கடுமையான தண்டனைகளை விதிப்பதாக முந்தைய வாக்குறுதியை நிறைவேற்ற உதவும் என்று கூறினார். இஸ்ரேலுக்கு மிகப்பெரிய, பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஈரானின் டிரோன் தாக்குதல்களால் இஸ்ரேலில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.  இதனிடையே 100க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்கள் தங்களது வான்வெளியை கடந்து சென்றதாக ஈராக்கும் தெரிவித்துள்ளது. சிறிது நேரத்திற்கு பின் அண்டை நாடான ஜோர்டான், தங்களது வான்வெளியில் நுழைந்த பல ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பிராந்தியத்திற்குள் விழக்கூடும் என்ற அச்சம் காரணமாக தங்களது விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களால் இடைமறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரின் கூறுகையில், ‘‘இஸ்ரேலின் சுமார் 200 போர் விமானங்கள் இதில் பங்கேற்று 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனையடுத்து இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவியுள்ளது. இவற்றின் அச்சுறுத்தல்களை தடுப்பதற்காக பாதுகாப்பு அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன” என்றார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Readmore: விமானம் தரையிறங்கும் கியர் ஏன் பின்வாங்கப்படவில்லை?. நிபுணர்கள் எழுப்பும் 5 பெரிய கேள்விகள்?

KOKILA

Next Post

மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்கள்...! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு...!

Sat Jun 14 , 2025
மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர் (எலெக்ட்ரிக்கல்) உள்பட 58 விதமான பதவிகளில் 1,910 காலி்யிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு (ஐடிஐ மற்றம் டிப்ளமா கல்வித் தகுதி உடைய பதவிகள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஜூலை 12-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்‌ […]
TNPSC 2025 2

You May Like