முதலிரவில் கதறி துடித்த இளம்பெண்..!! பதறிய மாப்பிள்ளை..!! அழகான பெண் குழந்தை..!! குடும்பமே அதிர்ச்சி..!!

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் நடைபெற்றது. இவர் திருமணத்திற்கு முன்பே தவறான உறவில் கர்ப்பமானார். இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, மகளின் வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தனிக் கவனம் செலுத்தினர். மகள் கர்ப்பமாக இருப்பதை மறைத்து நல்ல இடத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதற்காக அவசர அவசரமாக மாப்பிள்ளை தேடும் படலமும் தொடங்கியது.


அந்தவகையில், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் வசித்துவரும் இளைஞருடன் தனது மகளுக்கு திருமண நிச்சயம் செய்தனர். பெண் பார்க்க வந்தபோது மணப்பெண்ணின் வயிறு பெரிதாக உள்ளதாக மணமகன் வீட்டார் சந்தேகம் எழுப்பினர். உடனே பெண்ணின் தாயார் அப்போது சமீபத்தில் பெண்ணுக்கு கல் அகற்றும் அறுவை சிகிச்சை நடந்ததால் தான் அவரது வயிறு பெரிதாக உள்ளது போல் தெரிகிறது. சில நாட்களில் சரியாகிவிடும் என கூறியுள்ளனர். இந்நிலையில், ஜூன்26ஆம் தேதி டெல்லியில் நிச்சயம் செய்த அதே இளைஞருடன் உறவினர்கள் நண்பர்கள் சூழ தடபுடலாக திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் பெற்றோர்கள் ஹைதராபாத் வந்து விட்டனர். திருமணம் முடிந்த அன்று இரவே முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகன் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் பல்வேறு கனவுகளுடன் காத்திருந்தார். தலை நிறைய பூ சிகை அலங்காரத்துடன் பட்டுப்புடவையில் மணப்பெண் கையில் பால் இனிப்புகளை ஏந்தியபடி முதலிரவு அறைக்கு வந்தார். உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்த மணப்பெண் திடீரென வயிற்று வலியால் அலறி துடித்தார். ச்நேரம் செல்ல செல்ல வலி அதிகரிப்பதாக கூறியுள்ளார்.

இதனால், பதறிப் போன மாப்பிள்ளை குடும்பத்தார், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், இளம் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட மாப்பிள்ளை வீட்டார் பெரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். இதற்கிடையே, இளம் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த மணமகனின் குடும்பத்தினர் இது குறித்து உடனடியாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் மகள் கர்ப்பமாக இருப்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதனை மறைத்து திருமணம் செய்து வைத்தோம். பெரியமனது பண்ணி நீங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மாப்பிள்ளையிடம் கெஞ்சினர். ஆனால் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இளம்பெண் மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர்கள் சொந்த ஊருக்கே திரும்பி சென்றனர். இதுகுறித்து மணமகனின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

கோர விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யா..!! கடைசி ஆசை இதுதானா..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

Fri Jun 30 , 2023
தென்னிந்திய சினிமாவை அலங்கரித்த நடிகைகளில் ஒருவரான சௌந்தர்யாவின் நினைவுகளை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. காதலா காதலா, பொன்னுமணி, அருணாச்சலம், தவசி என ஏராளமான படங்களில் தனது வசீகரமான தோற்றத்தாலும், சிறப்பான நடிப்பாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.  தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக இன்றும் கருதப்படும் சௌந்தர்யா, பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம். அமிதாப் பச்சன் ஜோடியாக சூரியவன்ஷம் படத்தில் அவரின் நடிப்பு […]
23 649e7257d8835

You May Like