புயலை முன்கூட்டியே அறியும் பெண்..!! மின்னல் தாக்கி உயிர் பிழைத்ததால் கிடைத்த வரம்..!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிம்பர்லி க்ரோன். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜூன் 2009-இல் தனது வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென இந்தப் பெண்ணை மின்னல் தாக்கியுள்ளது. அதனால், அவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமையலறையின் கூரையில் இருந்த ஒரு விளக்கின் வழியாக ஊடுருவி, க்ரோன் சமைக்க வைத்திருந்த ஒரு எண்ணெய் கடாய் மீது தாக்கி அதை தூக்கி எரிந்தது. அதன் பிறகு, அதிலிருந்து வெளிப்பட்ட மின்னல் க்ரோனின் மார்பில் நேரடியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.


ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துவிட்டார். இருப்பினும், இவரின் உடலில் சில காயங்கள் ஏற்பட்டன. இந்த மின்னலானது 1,200 மின்னல் ஸ்ட்ரைக்ஸ் கொண்டதாக அறியப்படுகிறது. தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அவருக்கு ஒரு அசாதாரண திறன் கிடைத்துள்ளதாகவும் அதன் மூலம், புயல்கள் உருவாகும் முன்னரே அதை உணரும் திறன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், புயல் மேகங்கள் சூழும் போது, க்ரோன் தனது மார்பு பகுதியில் இறுக்கமான உணர்வை பெறுவதாக குறிப்பிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்..!! ஊழியர்களுக்கு மின்வாரியம் பகிரங்க எச்சரிக்கை..!!

Wed Jun 21 , 2023
விபத்தில்லா மின்வாரியம் அமைந்திட, மின் ஊழியர் உயிர் காத்திட 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6% ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்தரவை உடனே வழங்கிட வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் […]
TNEB Office

You May Like