17 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி 32 வயதில் மீட்பு..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி தகவல்..!!

உத்தரப்பிரதேசத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுமி, தற்போது 32 வயதில் டெல்லியில் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஷஹ்தரா ரோஹித் மீனா, ”2006ஆம் ஆண்டு சிறுமி கடத்தப்பட்டார். மே 22 அன்று, சீமாபுரி காவல் நிலையத்தின் ரகசிய தகவலின் பேரில், 17 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி, தற்போது 32 வயதாகும் அந்தப் பெண்ணை போலீஸார் கண்டுபிடித்தனர். சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக புகாரளித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து, உத்தரப்பிரதேசத்தின் செர்டிஹ் மாவட்டம் பாலியா என்ற கிராமத்தில் தீபக் என்ற நபருடன் வசித்ததாகவும், அதன்பிறகு சில பிரச்னைகளுக்குப் பிறகு தீபக்கை விட்டுவிட்டு கோகல்புரியில் வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கியதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்” என்று கூறினார். மேலும், ஷஹ்தரா ரோஹித் மீனாவின் கூற்றுப்படி, கடத்தப்பட்ட குழந்தைகள், நபர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் என மொத்தம் 417 பேர் இந்த ஆண்டில் மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

CHELLA

Next Post

9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி..!! சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்..!! புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு..!!

Fri May 26 , 2023
புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் தமிழக பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2011இல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு, CBSE பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 2014-15ஆம் கல்வியாண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2018-19ஆம் கல்வியாண்டில் 5ஆம் வகுப்பு வரை மட்டும் […]
CBSE12THEXAMKB

You May Like