மூத்த பாலிவுட் தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் கடுமையான மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போல் ராதா போல் மற்றும் லாட்லா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் நிதின் மன்மோகன். மூத்த திரைப்படத் தயாரிப்பாளரான இவருக்கு சனிக்கிழமை மாலை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரம்மச்சாரி, கும்னாம், நயா ஜமானா போன்ற படங்களில் நடித்து மறைந்த மன்மோகனின் மகன்தான் நிதின் மன்மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ”நிதின் மன்மோகன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) உள்ளார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மிகவும் ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்தார். அவரை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. 48 மணி நேரம் கழித்தே எதுவும் சொல்ல முடியும்” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.