கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் வெளியானது. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா சப்போர்ட்டாக இருக்கிறார்.
இந்தச் சூழலில் சூர்யா – ஜோதிகா குறித்து டூரிஸ்ட் ஃபேமிலி, ராட்சசி படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஓபனாக பேசியிருக்கிறார். ராட்சசி, டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரமான கமலேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், “ராட்சசி படத்தில் நடித்தபோது ஒருமுறை சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார்.
வந்ததுமே யார் அவன் கமலேஷ். கூப்பிடுங்க என்று சொன்னார். வந்தவர் ஏன் இப்படி கேட்கிறார் என்ற குழப்பத்துடன் அவர் முன் போய் நான் நின்றேன். என் பொண்டாட்டிய லவ் பண்றியா?: என்னை பார்த்து அவர், ‘என்ன என் பொண்டாட்டிய நீ லவ் பண்ணுறியா?.. நைட் உன்னைப் பத்திதான் பேசுறா என்று சொன்னார். அதற்கு நானோ, இல்லை சார் அப்படி நடிக்க சொன்னாங்க நடித்தேன் என்றேன்.
அதற்கு அவரோ, ‘அட சும்மா மிரட்டி பார்த்தேன் ப்பா. சாப்பிட்டியா என்று கேட்டார். இப்படி சூர்யா செம ஜாலியான ஆள். அதேபோல் ஜோதிகாவும் என்னுடைய பிறந்தநாளுக்காக ஒட்டுமொத்த செட்டுக்கும் பிரியாணி போட்டார். அவரும் என் மீது பாசமாக இருப்பவர்தான்” என்றார். டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு பிறகு ட்ரெண்ட் ஆன கமலேஷின் பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read more: மாநிலங்களவை தேர்தல்.. வேட்பு மனு ஏற்பு.. முதன்முறை எம்.பியாகிறார் கமல்ஹாசன்!