கருப்பான மனைவியை கிண்டல் செய்த கணவன்..!! கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரம்..!!

சத்தீஸ்கரில் மனைவி கருப்பாக இருப்பதாக தொடர்ந்து கிண்டல் செய்த கணவன் கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் அம்லேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சோன்வானி. இவரது மனைவி சங்கீதா சோன்வானி. சங்கீதா கருப்பாக இருப்பதால், அவருடன் அடிக்கடி ஆனந்த் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி அவர் கருப்பாய் இருப்பதை குறிப்பிட்டு கிண்டல் செய்தும் வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சங்கீதா கணவர் ஆனந்தை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கருப்பான மனைவியை கிண்டல் செய்த கணவன்..!! கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரம்..!!

பின்னர், மறுநாள் தனது கணவரை யாரோ சிலர் கொன்றுவிட்டதாக ஊரார் முன்னிலையில் நாடகமாடி உள்ளார். ஆனால், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சங்கீதா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர், கணவரை கொலை செய்தது தாம் தான் என்பதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CHELLA

Next Post

நியாயவிலைக்கடைகளில் 4,000 காலிப் பணியிடங்கள் நிரப்ப உத்தரவு …

Wed Sep 28 , 2022
நியாய விலைக்கடைகளில் உள்ள 4,000 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிமுறையின்படி 5 உறுப்பினர்கள் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் ஆ்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு ஆட்சியரால் இந்த பணிக்கான ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 4000 காலிப் பணியிடங்கள் உள்ளன. கட்டுநர், விற்பனையாளர் பணிக்கான இடங்களை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். […]
நியாயவிலைக்கடை

You May Like