BIS சான்றிதழ் இல்லாமல் 11,000க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட காமர்ஸ் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைன்ட்ரா(Myntra), மீஷோ(Meesho), பிக்பாஸ்கெட் (Bigbasket) நிறுவனங்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளுக்குப் பிறகு, இந்திய தரநிலைகள் பணியகம் அல்லது பிஐஎஸ் இந்த தளங்களில் சான்றிதழ் பெறாத பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களில் சோதனை நடத்தியதில், அதன் பொம்மைகள், சமையலறை உபகரணங்கள், மின் உபகரணங்கள் உட்பட 11,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் BIS சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிஐஎஸ் சட்டம் 2016 இன் கீழ் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சட்ட வழக்குகளைத் தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டத்தின்படி, “சான்றிதழில்லா பொருட்களின் மதிப்பை 10 மடங்குவரை அபராதமாக விதிக்க முடியும். மேலும், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.”மார்ச் மாதத்தில், சான்றிதழ் பெறாத தயாரிப்புகளின் முக்கிய சப்ளையரான டெக்விஷன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மீது விதிமுறைகளை மீறியதற்காக BIS இரண்டு சட்ட வழக்குகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: அயோத்தியில் கோலாகலம்!. பளிங்கு சிம்மாசனத்தில் ராமர்-சீதா!. ராமர் தர்பாரின் உருவப்படங்கள் வெளியானது!.