அழுக்குத் துணிகளைத் துவைக்கும் துணி துவைக்கும் இயந்திரம் போல, இப்போது மனிதர்களை துவைக்கும் வாஷின் மிஷின் உள்ளது. குளியல் தொட்டியில் மூழ்கவோ அல்லது ஷவரின் கீழ் நிற்கவோ தேவையில்லை. ஜப்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குளியல் வாஷின் மிஷின், உட்கார்ந்தாலே போதும் உங்கள் உடலில் உள்ள அனைத்து அழுக்குகளையும் கழுவிவிடும்.
இந்த இயந்திரம் முதன்முதலில் ஒசாகா உலக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த மனிதனை துவைக்கும் இயந்திரம் ஒரு காப்ஸ்யூல் போன்றது. குளிப்பவர் அதற்குள் படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூடியை மூட வேண்டும். இயந்திரம் தண்ணீரை எடுத்து உங்களைக் குளிப்பாட்டுகிறது. அது துணி துவைக்கும் இயந்திரம் போல உங்களைச் சுழற்றாது. நீங்கள் நிம்மதியாக குளிக்கலாம். 100 சதவீத தூய்மைக்கு உத்தரவாதமும் உள்ளது.
இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் நீங்கள் விரும்பும் பாடலைக் கேட்டுக்கொண்டே குளிக்கலாம். கடந்த ஆறு மாதங்களாக ஜப்பான் தொழில்நுட்ப கண்காட்சியில் இது அமோகமாக விற்பனையாகி வருகிறது. 27 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த இயந்திரத்தைப் பார்த்துள்ளனர். இருப்பினும், இந்த குளியல் இயந்திரத்திற்கான யோசனை 1970 களில் வந்தது.
நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சச்சிகோ மெகுரா கூறுகையில், புதிய இயந்திரம் உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் மனதையும் அமைதிப்படுத்துகிறது. இது சென்சார்கள் மூலம் பயனரின் இதயத் துடிப்பைக் கண்காணிக்கிறது. ஒசாகாவில் உள்ள ஒரு ஹோட்டல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக இதை வாங்கியுள்ளது.
சலவை இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? இந்த காப்ஸ்யூலில் படுத்துக் கொள்ள வேண்டும். இது மைக்ரோபபிள்கள் மற்றும் மிஸ்ட் ஷவர் மூலம் உடலை சுத்தப்படுத்துகிறது. சென்சார்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்கின்றன. குளித்தல் மற்றும் உலர்த்துதல் 15 நிமிடங்களில் முடிந்துவிடும். துண்டு அல்லது சோப்பு தேவையில்லை.
Read more: ரூ.1 கோடி சம்பாதிக்கணுமா? இதுவே சிறந்த திட்டம்..! அரசு உத்தரவாத்துடன்!



