பாட்டியாலாவைச் சேர்ந்த மகாராஜா பூபிந்தர் சிங் வெறும் ஒரு மன்னர் மட்டுமல்ல, அவர் தனது வளமான வாழ்க்கை முறை, உணவு மீதான அன்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் அறியப்பட்ட ஒரு மகத்தான ஆளுமை. அவரது பழக்கவழக்கங்கள் மிகவும் ஆடம்பரமாக இருந்ததால், அவரைப் பார்க்க வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கூட ஆச்சரியப்பட்டனர். அவரைப் பற்றிய சில கதைகள் மிகவும் ஆச்சரியமானவை, நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அவை அனைத்தும் உண்மைதான்.
குறிப்பாக பரோட்டாக்கள் மற்றும் கபாப்களை விரும்பினார், மேலும் ஒரே உணவில் ஐந்து பேருக்கு போதுமான உணவை அவர் எளிதாக சாப்பிட முடியும் என்று மக்கள் கூறுகிறார்கள். ஒருமுறை, ஒரு பிரிட்டிஷ் அதிகாரியுடன் இரவு உணவின் போது, அவரது தட்டில் சுமார் 15 வகையான பரோட்டாக்கள், கபாப் குவியல்கள் மற்றும் அவரது பிரபலமான பாட்டியாலா விஸ்கி ஆகியவை நிறைந்திருந்தன. அந்த அதிகாரி மிகவும் அதிர்ச்சியடைந்தார், பின்னர் அவர் அந்த அனுபவத்தைப் பற்றி எழுதினார்.
மகாராஜா பூபிந்தர் சிங் ஒரு உயரமான மனிதர், அவர் 6 அடி 4 அங்குல உயரமும் சுமார் 136 கிலோ எடையும் கொண்டிருந்தார். அவர் அக்டோபர் 12, 1891 இல் பிறந்தார், மேலும் அவர் ஒரு குழந்தையாக ‘டிக்கா சாஹிப்’ என்று அன்பாக அழைக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது 9 வயதில் தனது தந்தையை இழந்தார், விரைவில், அவர் பாட்டியாலாவின் ஆட்சியாளரானார். அவரது வாழ்க்கை வண்ணங்கள், கவர்ச்சி மற்றும் மறக்க முடியாத கதைகளால் நிறைந்தது.
தந்தையின் எதிர்பாராத திடீர் மறைவின் காரணத்தால் குழந்தை பருவத்திலேயே மகாராஜாவாக முடி சூடிக் கொண்டவர். முதலாம் உலகப்போர் முதல் ‘முதல் விமானம்’ வாங்கிய இந்தியர் வரை என பல ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரர் மகாராஜா பூபிந்தர் சிங். இவர் 365 துணைவியர் கொண்டிருந்தார் எனவும், இவருக்கு 88 குழந்தைகள் பிறந்தனர் எனவும் கூறப்படுகிறது. இவர் அணிந்திருந்த பாட்டியாலா எனும் வைர நெக்லஸ், 1920-களில் உலகப் புகழ்பெற்றதாகும்.
மகாராஜா பூபிந்தர் சிங் பாட்டியாலா, இந்திய அரச வம்சங்களுள் ஒருவர், இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1900 முதல் 1938ம் ஆண்டு வரை பாட்டியாலாவை ஆட்சி செய்தவர். தந்தை ராஜிந்தர் சிங்கின் மரணத்திற்கு பிறகு தனது 9வது வயதில் நவம்பர் 9, 1900 அன்று மகாராஜா அரியணையில் அமர்ந்தார் பூபிந்தர் சிங். இவரது 18ம் வயது வரை, இவரது பெயரில் அமைச்சரவை ஆட்சி செய்து வந்தது. 1909ம் ஆண்டு 18 வயதை அடைந்த பிறகு, மகாராஜா பூபிந்தர் சிங் நேரடியாக தனது அனைத்து பொறுப்புகளையும் ஏற்று ஆட்சிப்புரிய துவங்கினார்.
மகாராஜா பூபிந்தர் சிங் ஜெனெரல் அதிகாரியாக பிரான்சு, இத்தாலி, பெல்ஜியத்திலும், மற்றும் முதலாம் உலகப்போரின் போது பாலஸ்தீனில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாகவும் பணியாற்றி இருந்தார். இந்தியாவில் விமானத்தை சொந்தமாக வைத்திருந்த முதல் நபர் மகாராஜா பூபிந்தர் சிங் தான். 1910ம் ஆண்டு தான் வாங்கிய விமானத்திற்காக தனியாக விமான ஓடுதளம் ஒன்றை கட்டமைத்தார் பூபிந்தர் சிங். வாகனங்களில் ஆர்வம் கொண்ட இவர், 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்திருந்தார். பாட்டியாலாவில் தனித்துவம் வாய்ந்த கட்டிடங்கள் காட்டியதில் பெரும்பங்கு மகாராஜா பூபிந்தர் சிங் அவர்களுக்கு உண்டு.
பல்வேறு துறைகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் மகாராஜா பூபிந்தர் சிங். இவர் கிரிக்கெட் வீரராக 27 முதல்தர போட்டிகளில் விளையாடி 643 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரைச்சதமும் அடங்கும். மேலும், இவரது மகன்களான யுதவிந்திர சிங் பலீந்திர சிங் இருவரும் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டிருந்தனர்.
மகாராஜா பூபிந்தர் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துகாண்கையில், இவருக்கு 10 மனைவிகள் மற்றும் எண்ணிலடங்கா துணைவியர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கணக்கு நூற்றுக்கணக்கில் இருந்ததாகவும், மகாராஜா பூபிந்தர் சிங்கிற்கு மொத்தம் 88 குழந்தைகள். இவர்களுள் பிறந்து உயிருடன் இருந்தவர்கள் 53 பேர்.உலகப் புகழ்பெற்ற பாட்டியாலா நெக்லஸ்-ன் சொந்தக்காரர் மகாராஜா பூபிந்தர் சிங். இந்த நெக்லஸ் Cartier எனும் புகழ்பெற்ற நகை நிறுவனம் வடிவமைத்து உருவாக்கிக் கொடுத்தது. இந்த நெக்லஸ் 5 சங்கிலி அடுக்கு கொண்டது, இதில் 2,930 வைரக் கற்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
அந்த காலக்கட்டத்தில் உலகின் 7வது பெரிய வைரமாக கருதப்பட்ட ‘De Beers’ எனும் வைரக்கல், நெக்லஸின் மையப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த வைரம் 428 கேரட் பியூர் கட் என கூறப்படுகிறது. இதுப்போக மேலும் 7 பெரிய வைரக்கற்கள் மற்றும் மாணிக்கங்கள் அந்த நெக்லஸில் பாதிக்கப்பட்டிருந்தன.
இன்றைய தேதி வரையிலும், Cartier நிறுவனத்திற்கு மிகப்பெரிய சிங்கிள் ஆர்டர் கொடுத்தது பூபிந்தர் சிங் அவர்கள் தான் என கூறப்படுகிறது. 1925ம் ஆண்டு ரூ.100 கோடிக்கு நகை ஆர்டர் செய்தாராம். இதன் இன்றைய மதிப்பு (2023ல்) 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும். 1948ம் ஆண்டு பாட்டியாலா நெக்லஸ் களவு போனது. இதை கடைசியாக அணிந்திருந்தவர் யுதவிந்திர சிங். பிறகு, பல்வேறு இடங்களில் இதன் சில பாகங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டதே தவிர, முழுமையாக இந்த நெக்லஸ் மீண்டும் கிடைக்கவில்லை.
டொமினிக் லாபியர் மற்றும் லாரி காலின்ஸ் எழுதிய ‘Freedom at Midnight’ என்ற புத்தகத்தில், மகாராஜா பூபிந்தர் சிங் கடைப்பிடித்து வந்த ஒரு வினோத வழக்கம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், ஆண்டுக்கு ஒருமுறை தனது வைர நெஞ்சு பட்டை (Diamond Breastplate) மட்டும் அணிந்து நிர்வாணமாக நடந்து வருவதை மகாராஜா பூபிந்தர் சிங் பின்பற்றி வந்துள்ளார்.
Readmore: சூப்பர் வாய்ப்பு..! TNPSC – Group II & IIA முதல்நிலை போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…!