தவெகவுக்கு புதிய சிக்கல்..? 2 வாரங்களில் விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

barandbench 2025 07 17 jmrcvg3m 10

கட்சிக்கொடி விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியை தவெக பயன்படுத்த தடை கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் “ சிவப்பு, மஞ்சள் நிறத்தில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன அமைப்பின் கொடி உருவாக்கப்பட்டது.. இந்த சபையின் வர்த்தக முத்திரையாக பதிவு இது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழும் பெறப்பட்டது..


இந்த சபையின் முதன்மை நிர்வாகிகள், ஊழியர்கள், முகவர்கள், வாரிசுகள் ஆகியோர் மட்டுமே இந்த முத்திரையை பயன்படுத்த முடியும்.. வேறு எந்த ஒரு நபரும் இந்த வர்த்தக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.. ஆனால் சமீபத்தில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும் இதே நிறத்தை கொண்டுள்ளதால், இந்த கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.. ” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது வர்த்தக முத்திரை என்பது, சரக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.. எப்படி அரசியல் கட்சிக்கு பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.. அப்போது மனுதாரர் தரப்பு, வர்த்தக முத்திரை, சரக்கு மட்டுமில்லாமல் சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் கீழ் இந்த முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளித்தார்.. இதையடுத்து இந்த மனு தொடர்பாக மற்றும் அக்கட்சி தலைவர் 2 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

Read More : அடுத்த முறை அமித்ஷா தமிழகம் வந்தால் அதிமுக இரண்டாக உடையும்.. அடித்து சொல்லும் திமுக முக்கிய புள்ளி..

English Summary

The Madras High Court has ordered Thaveka leader Vijay to respond within 2 weeks in the tvk party flag issue.

RUPA

Next Post

“இது சரியல்ல.. கலகமூட்டும் தீயவர்களுக்கு இடம் கொடுக்காதீங்க..” காமராஜர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்..

Thu Jul 17 , 2025
பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றும் கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.. பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து […]
MK Stalin dmk

You May Like