வேலைக்குச் சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் உதட்டை இளம்பெண் ஒருவர் கடித்து துப்பியிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் கடந்த 4ஆம் தேதி அன்று, இளம்பெண் ஒருவர் வயல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர், அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றதும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்குள் இழுத்திருக்கிறார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, வலுக்கட்டாயமாக அந்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று புதர் பக்கம் சென்றிருக்கிறார். பின்னர் அந்த பெண்ணை தாக்கி ஆடைகளை அவிழ்த்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண், முதலில் முத்தம் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதை கேட்டதும் சரி என்ற வாலிபர் முத்தம் கொடுக்க முயன்றிருக்கிறார்.

முத்தம் கொடுக்கும்போது எதிர்பாராத விதமாக வாலிபரின் உதட்டை கடித்து சிதைத்திருக்கிறார் அந்த இளம்பெண். இதில் அந்த வாலிபர் கதறி துடித்திருக்கிறார். இதனால், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த இளம் பெண்ணை மீட்டனர். பின்னர், அந்த வாலிபரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் அந்த வாலிபரை பாலியல் வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.