தவெகவுடன் கூட்டணி வைக்கப் போகும் முக்கிய கட்சி..!! அதிர்ச்சியில் அதிமுக..!! குஷியில் விஜய்..!!

tvk vijay n

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், யாருடன் கைகோர்க்கப் போகிறது என்பதே தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக். இந்நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளைக் கணிசமாக தன்வசம் வைத்துள்ள எஸ்டிபிஐ (SDPI) கட்சி, விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், “தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகே முறைப்படி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.


இருப்பினும், ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள மாநிலக் குழு கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதா அல்லது மாற்றுத் திட்டங்கள் குறித்து விவாதிப்பதா என்பது குறித்துத் தெளிவான முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மதச்சார்பற்ற கொள்கை மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சக்திகளுடன் இணைந்து பயணிக்கத் தங்களது கட்சி எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டிலேயே ‘ஊழல் மற்றும் மதவாதம்’ ஆகிய இரண்டுக்கும் எதிராக தனது நிலைப்பாட்டை ஆணித்தரமாகப் பதிவு செய்தார். இது சிறுபான்மையினரின் நலன்களை முன்னிறுத்தும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. கடந்த காலங்களில் அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வகித்த எஸ்டிபிஐ, தற்போது ஒரு வலுவான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Read More : அதிமுகவில் வெடித்த அதிகார மோதல்..!! அதிருப்தியில் மாஜி அமைச்சர்கள்..!! புலம்பும் இபிஎஸ்..!! குறுக்கே புகுந்த திமுக..!!

CHELLA

Next Post

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்..!! இனி இவர்கள் விண்ணப்பிக்க முடியாது..!! வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Thu Jan 15 , 2026
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தொடர்பாக, பயனாளிகளின் தகுதிகள் குறித்த கூடுதல் விளக்கங்கள் மற்றும் சில புதிய கட்டுப்பாடுகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மாதம் ரூ.1,000 வழங்கும் இத்திட்டம், உண்மையான ஏழை எளிய பெண்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் நிரந்தரப் பணியில் இருந்து ஊதியம் பெறுபவர்களுக்கு இனி இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது […]
Magalir Urimai Thogai 2025

You May Like