சென்னையில் பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த தாயையும் அவரது இரண்டாவது கணவரையும் போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் பானு (28), இவருக்கும் வில்ராஜ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விமல்ராஜும் பானுவும் பிரிந்தனர். தற்போது இரண்டாவது கணவர் ஜெகன் என்பவருடன் வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல்போனதாக பானு அவரது தயாருக்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது வந்து பார்த்தபோது நெற்றியில் சிகரெட் சூடு காயம் இருந்துள்ளது. அதே போல குழந்தையின் உடலில் பல இடங்களில் அடித்தது போன்ற காயம் இருந்தது. இதனால் குழந்தையை கன்னியம்மாள் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்தியது. மகளிர் போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது , பானு , அவரது இரண்டாவது கணவர் ஜெகன் குடிபோதையில் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.