தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் பணியிடங்கள் நிரந்தரம் கிடையாது எஎன நகராட்சி பிறப்பித்துள்ள புதிய உத்தரவால் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் 1996ல் தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
மக்கள் தொகைகக்கேற்ப , மாநகராட்சிகளை வகைப்படுத்தி , பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் தமிழக நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு மாநகராட்சியும் பணியாளர் பிரிவு , வருவாய் மற்றும் கணக்கு பிரிவு , பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு , பொது சுகாதார பிரிவு என நான்கு பிரிவுகளுடன் செயல்பட வேண்டும்.
இதில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை , 5 மண்டலங்களுடன் செயல்படும் கோவை , மதுரை மாநகராட்சிகளுக்கு 402 பணியிடங்கள் கோரப்பட்டன.
ஆனால் , 301 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வார்டுக்கு ஒன்று வீதம் , 100 வரி வசூலர்கள் , பணியிடம் சட்ட ஆலோசகர் பணியிடம் நீக்கப்பட்டுள்ளது.
நான்கு மண்டலங்களுடன் செயல்படும் மற்ற மாநகராட்சிகளுக்கு இதை விட குறைவான எண்ணிக்கையில் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள. பணியிடங்கள் தவிர ஏற்கனவே நிரந்தர பணியில் உள்ள தூய்மை பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் , ஓட்டுனர்கள் , செயல் திறனற்ற மற்றும் செயல்திறன் பணியாளர்கள்.
அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், தரவு உள்ளீட்டாளர், தட்டச்சர் , வரிவசூலர் , மற்றும் பதிவறை எழுத்தம் ஆகியோருகு்கு ஓய்வு பெறும் காலம் வரை மாநகராட்சி நிதியில் ஊதியளம் அளிக்கப்பட உளளது.
ஓய்வக்கு பின்னர் , பணியிடங்கள் நிரப்பப்படாமல் , வெளி முகமை வாயிலாக மேற்கொள்ள , தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசாணையில் குறிப்பிடப்படாத பணியிடங்கள் இருழு்பின் அதை ஓய்வு பெறும் வரை பணி புரியலாம் அதன் பின் அப்பணியிடங்களை நிரப்பக் கூடாது என உத்தரவி்டடுள்ளது.
எனவே பத்து ஆண்டுகளுன்கு மேல் ஒப்பந்த முறையில் பணியாற்றுவோர் பணி நிரந்தரம் கேட்டு போராடி வரும் நிலையில் இனி நிரந்தர பணியிடம் இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஐகோர்ட் நாட அலுவலர்கள் சங்கத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.