தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!! மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா..?

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவின் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்போதைய கொரோனா வகை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

CHELLA

Next Post

ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Wed Apr 5 , 2023
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, ரூ.2 கோடிக்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஏழு நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை பல கால வரம்புகளுக்கான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 7.15% வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக பேங்க் ஆஃப் […]
Fixed Deposit

You May Like