இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவின் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது பேராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்போதைய கொரோனா வகை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.