தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பலி எண்ணிக்கை..!! பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்..? அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்..!!

Anbil Mahesh School Mask 2025

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,302ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு முதியவர், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள உயிரிழந்துள்ள சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 4 பேரும், டெல்லி, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் என மொத்தம் 7 பேரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “முதியோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் வேண்டும் என்றும் கொரோனா பரவலால் பதற்றமடைய வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கொரோனா பரவி வரும் நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருந்தாலும், அந்தளவிற்கு தீவிரம் அடையவில்லை என்றும் இது வீரியம் குறைந்த தொற்று என்பதால், மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Read More : துபாய் டிராவல்ஸ் ஓனருக்கு முடிவு எழுதிய கள்ளக்காதலி..!! காட்டுக்குள் கிடந்த கள்ளக்காதலனின் உடல்..!! வழக்கில் திடீர் திருப்பம்..!!

CHELLA

Next Post

பாமகவில் தனித்தனியாக கூடும் பொதுக்குழு..!! ராமதாஸ் போட்ட பலே திட்டம்..!! அப்செட்டான அன்புமணி..!! என்ன நடக்கிறது..?

Wed Jun 4 , 2025
பாமக சார்பில் பொதுக்குழுவை கூட்டுவதற்காக புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தில் இருக்கிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று ராமதாஸை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, ராமதாஸின் கொள்கையை கையில் […]
Anbumani 2025 1

You May Like