பிரிட்டிஷ் துரையை பார்வை இழக்க வைத்த தலம்.. சிலைக்குக் கீழே அதிசய சுரங்கம்.. திருநெல்வேலியின் ஆன்மிக அடையாளம்!

Thiru Perathu Selvi Ambal Kovil 2

திருநெல்வேலியின் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பாளையங்குட்டத்துறை பேராத்துச் செல்வி அம்மன் கோவில், பக்தர்களின் மனதில் மிகுந்த நம்பிக்கையுடன் வேரூன்றியுள்ளது. இது சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஆலயம். ஆரம்பத்தில் “பேராத்துச் செல்வி” என்று அழைக்கப்பட்ட அம்பாள், பின்னர் “பேராச்சி அம்மன்” என்று மருவி அழைக்கப்பட்டார்.


பக்தர்கள் கூறுவதன்படி, ஒரு காலத்தில் ஆற்றங்கரையில் பிரசவ வலியால் தவித்த சலவை தொழிலாளி பெண்ணுக்கு, அம்மன் நேரில் தோன்றி பிரசவம் பார்த்ததாக நம்பப்படுகிறது. அதனால் இன்று வரை கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் இங்கு வந்து அருளைப் பெறுகின்றனர்.

இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் சிலைக்குக் கீழே ஒரு சுரங்கம் இருக்கிறது. அந்த சுரங்கம் தாமிரபரணி ஆற்றில் அம்மன் வெளிப்பட்ட இடத்திற்கே செல்கிறது. அதனால் பக்தர்கள் அம்மனுக்காக செய்யும் ஆயிரம் கண் பானை பொங்கலை அந்த சுழலில் விட்டுவிடுகிறார்கள்; அது நேராக அம்மனிடம் சென்று சேரும் என்று நம்புகிறார்கள்.

தல வரலாற்றின் படி, நெல்லையில் இருந்த ஒரு பக்தர் காசி வரை உள்ள அனைத்து அம்மன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டார். முதுமை அடைந்ததும் அவர் பிரார்த்தனை செய்ய முடியாத நிலையிலிருந்தார். அப்போது அம்பாள் கனவில் தோன்றி, “நீ வசிக்கும் இடத்தில் நான் எழுந்தருளுகிறேன்” என்று கூறினாள். மறுநாள் பக்தர் தாமிரபரணியில் மூன்று அத்திமரங்கள் அருகே ஒரு எலுமிச்சை பழம் மிதப்பதைப் பார்த்து, நீரில் மூழ்கி அந்தச் சிலையை எடுத்துக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். இன்று வரை அதே சிலை அசையாமல் அதே இடத்திலே அருள்பாலிக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு துரை இந்த ஆலயத்தின் சக்தியை அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. குற்றாலம் செல்லும் வழியில் நெல்லையில் தங்கிய துரை, பேராத்துச் செல்வி ஆலயத்தின் கொடை விழா ஒலியால் கோபமடைந்து விழாவை நிறுத்தச் சொன்னார். அத்துடன், “இனி விழா வேண்டாம்” என்று உத்தரவிட்டார். உடனே அவரது கண் பார்வை மறைந்தது. பின்னர் மனமுருகி அம்மனை மன்னிக்கக் கேட்டபோது, “பொன்னால் கண் மலர் காணிக்கை கொடு, பார்வையும் தூக்கமின்மையும் நீங்கும்” என்ற அசரீரி கேட்டது. அவர் அதைப் பின்பற்றி காணிக்கை செலுத்தியதும் கண் பார்வையும் உடல் நலமும் திரும்பியது.

இத்தனை சக்தி வாய்ந்த பேராத்துச் செல்வி அம்மனை “கண் தாய்” என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். கண் நோய், மகப்பேறு பிரச்சனை, திருமண தடை, குழந்தை இல்லாமை போன்றவற்றில் அம்மனை வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செவ்வரளி மாலை மற்றும் மாவிளக்கு கொண்டு வேண்டினால் விரைவில் பலன் கிடைக்கும் என்பதும் பக்தர்கள் அனுபவம்.

Read more: நவம்பர் 7 முதல் மூன்று ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஆடம்பரமான வாழ்க்கையைத் தருவார்..! உங்க ராசி இருக்கா..?

English Summary

The place that made the British lose their sight.. The miraculous tunnel under the statue.. The spiritual symbol of Tirunelveli!

Next Post

குட் நியூஸ்...! கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் இலவச லேப்டாப்...!

Thu Nov 6 , 2025
அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி […]
tn govt 20251 1

You May Like