தவறவிட்ட 40 சவரன் நகையை 2மணிநேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினர்.., நடந்த சுவாரசிய சம்பவம்

ஆவடி மாநகர காவல் ஆணையரகம் திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூர்த்தி நகர், நாகாத்தம்மன் கோவில் தெரு, வசிப்பவர் ஹரிஷ் சங்கர்(25). இவர் நேற்றைய தினம் தனது தாயாருடன், 40 சவரன் நகை கொடுக்க அக்காவீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார. அப்போது வளைவில் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக் மீது உரசியபோது, மாட்டி வைத்திருந்த பை அந்த இடத்திலேயே விழுந்தது.


இதை கவனிக்காமல் சென்ற ஹரிஷ் சங்கர், அக்கா வீட்டிற்கு சென்று அவருக்கு நகை கொடுக்க பார்த்தபோது அந்த பையை காணவில்லை. இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், துரிதமாக செயல்பட்டு அப்பொகுதியில் இருந்த CCTV கேமராவை ஆய்வு செய்தபோது, கீழே விழுந்த நகை வைத்திருந்த பையை அருகில் இருந்தா முதியவர் வீட்டினுள் எடுத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 40 சவரன் நகையை சுமார் 2 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர். பிறகு இன்று காலை ஆவடி காவல் ஆணையாளர் திரு.சந்திப்ராய் ராத்தோர் அவர்கள் உரியவர்களை நேரில் அழைத்து நகைகளை பத்திரமாக எடுத்துச் செல்லவேண்டும் என அறிவுரை வழங்கி ஒப்படைத்தார். சுமார் 16 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகையை 2மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Newsnation_Admin

Next Post

இனி இதற்கு வரி செலுத்த தேவையில்லை..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

Tue Dec 27 , 2022
இனிமேல் வரி செலுத்துவோர் சிகிச்சைக்காக பெறும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி என்பது வரி வரம்புக்குள் வரக்கூடிய அனைத்து இந்திய குடிமக்களும் செலுத்த வேண்டிய வரி ஆகும். நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் இவ்வரி முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது இதுகுறித்த ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு அரசு பெரிய நிவாரணமானது கொடுக்கப்போகிறது. அதாவது, […]

You May Like