நாடு முழுவதும் உச்சத்தை தோட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை!… என்ன காரணம்?… மக்கள் அவதி!

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளதால் நடுத்தர வாசிகள் அவதியடைந்துள்ளனர்.


நாடு முழுவதும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலையும் கடந்த ஒரு மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் சிறு அளவிலான உணவகங்கள் நடத்துபவர்கள் கவலையடைந்துள்ளனர். தேசிய அளவில் உருளைக்கிழங்கு 8.8% , வெங்காயம் 11.1%, தக்காளி இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விவரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவு காரணமாக 60 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து 75 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் வாங்கிச் சென்றனர். இந்நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

விலை உயர்வுக்கு இயற்கை சூழல்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஒருபுறம் தீவிர பருவ மழையும், மறுபுறும் வெப்ப காற்றும் வீசி வருகிறது. குஜராத் , ராஜஸ்தான் பகுதிகளில் பைபர்ஜாய் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் தக்காளி சாகுபடி பெரும் பாதிப்பை கண்டுள்ளது என கமாடிட்டி சந்தை நிபுணர் அஜய் கேடியா தெரிவித்துளளார். அதேபோல, கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக விவசாயிகள் குறைவான அளவே தக்காளி சாகுபடியை செய்துள்ளனர். பீன்ஸ்சுக்கான கொள்முதல் விலை அதிகம் இருப்பதால், இந்தாண்டு விவசாயிகள் அதிக அளவில் பீன்ஸ் சாகுபடியில் ஈடுபட்டனர்.

எனவே, குறைவான மகசூலுடன் மழை, வெப்பம் காரணமாக பயிர் சேதம் என அனைத்து சூழல்களும் ஒன்றிணைந்து விலை உயர்வுக்கு காரணாக அமைந்தாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ 80-90 ரூபாய்க்கும், சில்லரை அங்காடிகளில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. எனவே, சராசரியாக ஒரு கிலோ வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது கால் கிலோ தான் வங்கி செல்வதாக கூறப்படுகிறது.

KOKILA

Next Post

மாஸ்..! இன்று முதல் ஜூலை 25-ம் தேதி வரை முதலமைச்சர்‌ கோப்பை...! மொத்தம் 27,000 வீரர்கள் பங்கேற்பு...!

Sat Jul 1 , 2023
இன்று முதல் ஜூலை 25ஆம் தேதி வரை முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என தமிழக அரசு ஏற்கனவே அளித்தது. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ […]
images 4 3

You May Like