சென்னையில் இன்று காலை ரூ.880 குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.. இந்த வாரத்திலும் திங்கள், செவ்வாய் என 2 நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்தது.. பின்னர் மீண்டும் உயர்ந்த நிலையில், விஜயதசமி நாளான நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. ஆனால் மாலையில் விலை உயர்ந்தது..
அதே போல் இன்றும் காலையில் ரூ.880 குறைந்த தங்கம் விலை தற்போது மாலை உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ரூ.10,900க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.87,200க்கு விற்பனையாகிறது..
தங்கம் விலை இன்று காலை குறைந்த நிலையில் மாலையில் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதே போல் இன்று காலை குறைந்த வெள்ளி விலை மாலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.162க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,62,000 விற்பனையாகிறது.
Read More : அடிதூள்..! இனி 1 மணி நேரத்தில் காசோலையை பணமாக்கலாம்.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதி..!!