தங்கம் விலை இனிமேல் இப்படி தான் இருக்கும்.. அடித்து சொன்ன ஆனந்த் சீனிவாசன்..!!

Anand Srinivasan 1

பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.


தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

கடந்த 10 நாட்களாகத் தங்கம் விலை ரூ.8850- ரூ.8890 என்ற ரேஞ்சிற்குள்ளேயே இருந்து வந்துள்ளது. நேற்று மட்டும் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்து 9 ஆயிரத்தை கடந்தது. வரும் காலங்களில் இதே நிலை தொடருமா அல்லது விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற பதிலை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், “டிரம்ப் இப்போது its a beautiful bill என்ற சட்டத்தைக் கொண்டு வரப் பார்க்கிறார். அந்த மசோதா நிறைவேறிவிட்டால் அமெரிக்காவில் பற்றாக்குறை அதிகரிக்கும். அதாவது வரவு குறையும் செலவு அதிகரிக்கும்.. இதனால் செலவுகளைச் சமாளிக்க அமெரிக்கா கடன் வாங்கும் தொகையும் அதிகரிக்கும். இதனால் நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்.

மறுபுறம் ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் முடிவுக்கு வந்து அமைதி திரும்பினால் தங்கம் விலை சற்றே குறையும். ஆனால், அதுவும் கூட தற்காலிகமானதாகவே இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், ரஷ்யாவும் சீனாவும் தங்கத்தை அதிகம் வாங்கி வைத்துள்ளன. இதனால் அவர்கள் தங்கள் தங்க ரிசர்வின் மதிப்பைக் குறைய விட மாட்டார்கள். தங்கம் விலை ஓரளவுக்கு மேல் குறைந்தால் உள்ளே புகுந்து வாங்க ஆரம்பித்துவிடும்” என்றார்.

அதாவது ரஷ்யா, சீனா உட்பட சில நாடுகள் கடந்த சில ஆண்டுகள் தங்கள் தங்க ரிசர்வை பல மடங்கு அதிகரித்துள்ளன. தங்கத்தின் மதிப்பு சரிந்தால் அதன் ரிசர்வ் குறைந்துவிடும் என்பதால் தங்கம் விலை ஓரளவுக்கு மேல் குறைந்தால் உடனடியாக இந்த நாடுகள் உள்ளே புகுந்து தங்கத்தை வாங்கி, விலை பெரியளவில் குறைவதே தடுக்கும் என்பதே அவரது கருத்து.

Read more: டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான சொத்து மதிப்பீடு 2024.‌..! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Next Post

தொழில்‌ தொடங்க மின்‌ உபகரணங்கள்‌ கொள்முதல்‌ செய்ய தாட்கோ மூலம்‌ ரூ.3 லட்சம்‌ வரை மானியம்...!

Tue Jun 3 , 2025
தொழில்‌ தொடங்க மின்‌ உபகரணங்கள்‌ கொள்முதல்‌ செய்ய தாட்கோ மூலம்‌ ஒருவருக்கு ரூ.3 லட்சம்‌ வரை வழங்கப்படும். ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ ஆவின்‌ நிறுவனத்தின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின்‌ நிறுவனத்திடம்‌ ஒப்பந்தம்‌ செய்யப்பட வேண்டும்‌. தொழில்‌ செய்ய தாட்கோ மூலம்‌ மின்‌ வாகனம்‌, உறைவிப்பான்‌, குளிர்விப்பன்‌ […]
money 2025 e1749486445504

You May Like