பூசாரி பார்த்த மொரட்டு வேலை..!! வலையில் சிக்கிய தொழிலதிபர்..!! சூனியத்தால் சுக்குநூறான குடும்பம்..!!

Arrest 2025

தொழில் பார்ட்னர் சூனியம் வைத்திருப்பதாக கூறி 76 கிராம் தங்கம் நகைகளை மோசடி செய்த கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.


சென்னை மந்தைவெளி ஸ்ரீ வேங்கடட்ம டிரஸ்ட் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் (56). தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறார். சில நாட்களாக தொழில் சரியாக கைகொடுக்கவில்லை என தனது நண்பரிடம் கூறி வந்துள்ளார். அப்போது அவர், பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள பூசாரி பூர்ண பிரகாஷ் என்பவர், சொல்வது எல்லாம் நடப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, தனது நண்பர் மூலம் கோயில் பூசாரியை தொழிலதிபர் ரமேஷ் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, தான் அறநிலையத்துறையில் உறுப்பினராக உள்ளதாக கூறியுள்ளார். பிறகு தொழிலதிபர் ரமேஷ் வீட்டிற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பூஜை பொருட்களுடன் வந்து யாகம் செய்துள்ளார் பூசாரி. அப்போது, ரமேஷின் தொழில் பார்ட்னர் தான், ‘சூனியம்’ வைத்திருப்பதாக பூசாரி கூறியுள்ளார். மேலும், இதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார்.

எனவே, இதைக்கேட்டு தொழிலதிபர் எஸ்.பி.ஆர்.ரமேஷ் தன்னுடைய மனைவியின் 2 தங்க செயின், ஒரு வலையல் என மொத்தம் 76 கிராம் தங்க நகைகள் மற்றும் குடும்ப புகைப்படத்தை பூசாரியிடம் கொடுத்துள்ளார். ஆனால், பரிகார பூஜை முடிந்தும், அந்த நகைகளை திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார். நேரடியாக சென்று அவரிடம் நகையை கேட்டபோது, உங்கள் குடும்பத்தின் மீது ‘சூனியம்’ வைத்து உங்களை தொழிலை முடக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி.ஆர்.ரமேஷ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 76 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Read More : “எல்லாம் பண்ணிட்டு இப்போ மட்டும் பிடிக்கலையா”..? விலகிய காதலனுக்கு வேட்டு வைத்த காதலி..!! ஒரே ஒரு ஃபோட்டோவால் மொத்தமும் போச்சு..!!

CHELLA

Next Post

ஆபரேஷன் சிந்தூர்: இரு நாடுகளும் எவ்வளவு இழப்பைச் சந்தித்தது.. 3 நாள் போருக்கு எத்தனை கோடிகள் செலவிடப்பட்டன..? - முழு விவரம்

Mon Jun 2 , 2025
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கையில் இரு நாடுகளும் எவ்வளவு இழப்பைச் சந்தித்தன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , மே 7 அன்று பாகிஸ்தானில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது . இந்த நடவடிக்கையின் போது, ​​இந்தியா ஒரு மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் காஷ்மீரிலும் பாகிஸ்தானிலும் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்தது, இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில், இந்தியா பாகிஸ்தான் மீது […]
Operation Sindoor 1

You May Like