ரஜினியின் கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்த தயாரிப்பாளர் போதைப்பொருள் வழக்கில் கைது!

கபாலி தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர் கே.பி.சௌத்ரி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்த கபாலி படம் 2016ல் வெளிவந்தது. பா.ரஞ்சித் இயக்கிய அந்த படத்திற்கு விமர்சன ரீதியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் வசூல் 1000 கோடிக்கும் அதிகம் என தயாரிப்பாளர் தாணு பேட்டி அளித்தார். கபாலி படத்தின் தெலுங்கு உரிமையை கே.பி.சவுத்ரி என்பவர் வாங்கி இருந்தார். தயாரிப்பாளராகவும் பட விநியோகஸ்தராக தொழில் செய்து வந்த அவர் நஷ்டம் காரணமாக அந்த தொழிலையே விட்டுவிட்டாராம். அவர் அதர்வா நடித்த கணிதன் படத்தையும் வாங்கி வெளியிட்டு இருந்தார்.

சினிமாவை விட்டுவிட்டு கோவாவில் செட்டில் ஆன கே.பி.சவுத்ரி தற்போது கஞ்சா வழக்கில் Cyberabad போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவரிடம் 90 பாக்கெட்டுகளில் கோகைன் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அதன் எடை 82.75 கிராம்கள். அவர் வீட்டை விட்டு வெளியில் வரும் போலீசார் கைது செய்திருக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு அவர் போதைப்பொருளை விற்க கிளம்பிய போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கின்றனர். இது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவாவில் இருந்து போதை பொருள் வாங்கி வந்து சவுத்ரி ஹைதராபாத்தில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

KOKILA

Next Post

வெப்ப அலை எச்சரிக்கை!... அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கடுமையான வெப்பம் இருக்கும்!... வானிலை மையம்!

Thu Jun 15 , 2023
ஒடிசா, வங்காளம், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற கிழக்கு கடற்கரை மாநிலங்களில் அடுத்த மூன்று-நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலால் தூண்டப்பட்ட கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு மாறாக, ஒடிசா, வங்காளம், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற கிழக்கு கடற்கரை மாநிலங்களில் அடுத்த மூன்று-நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் […]
241c70d0aa7ece315317877f64b16af6e9c0e8091e8b61bef4dfa45af364b659

You May Like