பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.. அதே போல் அடங்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதை தாண்டி தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது..
தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை.. சமீபத்தில் மதுரைக்கு என பிரத்யேக ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.. இந்த நிலையில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது..
இந்த போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. 600 மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.. இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி மொத்த 10 சுற்றுகள் நடைபெறும்.. ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.. இறுதிச்சுற்றில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.. வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்..



