புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மாதிரியை தேர்தல் ஆணையம் இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்துகிறது. அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் மற்றும் 57 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளை ஆலோசனை நடத்த தேர்தல் குழு அழைத்துள்ளது.
தொலைதூர வாக்களிப்பைப் பயன்படுத்தி உள்நாட்டு புலம்பெயர்ந்தோரின் வாக்காளர் பங்கேற்பை மேம்படுத்துவது பற்றிய விவாதத்திற்கு சமீபத்தில் ஆணையும் அழைத்திருந்தது. ரிமோட் EVM-ன் செயல்பாட்டின் போது, தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
டெல்லியில் தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று நடைபெறும் ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தம்பிதுரை, சந்திரசேகர் பங்கேற்கின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்புரத்தினம், பிரகாஷ் பங்கேற்கின்றனர்.