அரசமரத்தை இந்த 2 கிழமைகளில் மட்டும்தான் வழிபடவேண்டும்!. மற்ற நாட்களில் வழிபட்டால் என்ன ஆகும் தெரியுமா?

arasamaran worship 11zon

அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அரசமரத்தை திங்கள்கிழமையன்று இன்று வலம்வந்தால் வீட்டில் மங்கலக்காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். செவ்வாய்கிழமையில் வளம் வருவது செவ்வாய் தோஷங்களை நீக்கும். புதன்கிழமையில் வலம்வந்தால் வியாபாரம் பன்மடங்கு பெருகும்.


கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் வளம் வர வேண்டும். சகல சௌபாக்கியங்களும் தடையின்றி தொடர்ந்து கிடைக்க வெள்ளிக்கிழமை வலம்வர வேண்டும். எல்லா கஷ்டங்களையும் விலக்கி மகாலட்சுமியின் அருளை சனிக்கிழமை வலம்வருவது பெற்றுத்தரும்.

தீராமல் இருக்கும் எல்லா நோயையும் ஞாயிற்று கிழமை வலம் வருதல் போக்கும். சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கள்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வலம் வருதல் நலம்.

மூலதோ பிரம்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம

இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும். 108 முறை பிரகார வலம் முடிந்ததும் அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த வழிபாடு அமாசோமவார விரதம் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் செய்யும் அன்னதானம் பலமடங்கு புண்ணியங்களை கொண்டு சேர்க்கும். துணிகளை தானமாக கொடுக்கலாம். இந்த ஆடிஅமாவாசையை மறந்துவிடாமல் உங்கள் அருகில் உள்ள அரசமரத்தை வலம்வந்து எல்லா நன்மையையும் பெறுங்கள்.

அமாவாசை மற்றும் சனிக் கிழமைகளில் அரச மரத்தை வழிபடுவது சிறந்தது. இந்த இரண்டு நாட்களிலும் அரச மரத்தை வழிபடுவதன் மூலம், ஒருவர் பிள்ளையாரின் ஆசிகளைப் பெறலாம். அமாவாசை நாளில் அரச மரத்தை வழிபடுவதன் மூலம், பித்ரு தோஷம் நீங்குவதோடு, முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதன் காரணமாக, அந்த நபரின் வீட்டிற்கு செழிப்பு வரத் தொடங்குகிறது.

அதேபோல, சனிக்கிழமை அன்று அரச மரத்தின் அடியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுவது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது அவரின் கடுமையான பார்வையில் இருந்து விலக்கு அளிக்கிறது. அது வாழ்க்கையின் கடினமான துயரங்களில் இருந்து விடுபட வழியைக் கொடுக்கும்.

ஞாயிற்றுக்கிழமை தவறுதலாகக் கூட அரச மரத்தை வணங்கக் கூடாது. சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அரச மரத்தை வழிபடக் கூடாது. மற்ற நாட்களில் அரச மரத்தை சுற்றினால் அது வீட்டின் நிதி நிலையிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அரச மரத்தை வழிபடுவது நல்லதல்ல. அதனால், அவர் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

Readmore: ஜோதிடப்படி.. கணவர் வேலைக்கு வெளியே சென்றவுடன்.. மனைவி இதைச் செய்யக்கூடாது..!!

KOKILA

Next Post

Holiday: இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி & கல்லூரிகளுக்கு லீவ்...! மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Mon Jun 9 , 2025
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதியான இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி […]
School 2025 3

You May Like