உங்கள் வீட்டு வெள்ளை ஆடைகளையும் லாண்டரிக்குச் சென்று வந்ததைப் போலப் பளபளப்பாக மாற்ற வேண்டுமா..? அதுகுறித்த ரகசியங்கள் மற்றும் குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை நிற ஆடைகளில் உள்ள கறைகளை எளிதில் நீக்க வேண்டுமென்றால், சிறிது நேரம், அதை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகள், அழுக்குகள், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனது. எனவே, சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை எளிதில் அகற்றம்.
அதேபோல, ஒரு வாளி தண்ணீரில் சர்ப் பவுடரை கரைத்து, வெள்ளை நிற ஆடையை அதில் முழுமையாக முக்கி எடுக்க வேண்டும். பின்னர், ஆடையை ஒருமுறை அலசி எடுக்க வேண்டும். அடுத்ததாக, வாஷிங் சோடா மற்றும் பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்த வேண்டும். அதாவது, 10 துணிகளுக்கு சுமார் 100 கிராம் பிளீச் பவுடரும், 200 கிராம் வாஷிங் சோடாவை பயன்படுத்தலாம். ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து, அதன் மேல் துணியை விரித்து, அதன் மேல் பிளீச்சிங் பவுடரைத் தூவி, தண்ணீரில் கரையவிட வேண்டும். பிளீச்சிங் பவுடரை நேரடியாக தண்ணீரில் கலக்க வேண்டாம். ஆனால், வாஷிங் சோடாவை நேரடியாக தண்ணீரில் கலக்கலாம்.
அடுத்து, கறை படிந்த சட்டையை இந்த கலவையில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் சட்டையை எடுத்துப் பார்த்தால், கறைகள் நீங்கி சுத்தமாக இருக்கும். பின்னர், சட்டையை லேசாகத் துவைத்து, சுத்தமான தண்ணீரில் அலசி பிழிந்து எடுக்கவும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிளீச்சிங் பவுடரை வெள்ளை துணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கலர் துணிகளுக்குப் பயன்படுத்தினால் நிறம் மங்கிவிடும். பெயிண்ட் கறையைத் தவிர மற்ற அனைத்து கறைகளையும் பிளீச்சிங் பவுடர் நீக்கிவிடும்.
Read More : நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!