கோழிக்கறியை தனியாக சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த தந்தை, மரக்கட்டையால் தாக்கியதில் மகன் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் உள்ள குட்டிகர் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷீனா. குடும்பத்துடன் வசித்து வரும் இவருக்கு 32 வயதில் சிவராமன் என்ற மகனும் உள்ளார். இந்தநிலையில், கடந்த செவ்வாய் அன்று வீட்டிற்கு கோழி இறைச்சி எடுத்துவந்துள்ளார். இதையடுத்து, வீட்டில் உள்ளவர்களிடம் கோழி இறைச்சியை சமைக்க சொல்லிவிட்டு ஷீனா பணிக்கு சென்றுள்ளார். இதையடுத்து, தந்தை ஷீனா வீடு திரும்புவதற்குள் சமைக்கப்பட்டிருந்த கோழி இறைச்சி அனைத்தையும் குடிபோதையில் இருந்த அவரது மகன் சிவராம் சாப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஷீனா, சிவராமனை மரத்தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பலத்த காயமடைந்த மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சுப்ரமணியம் போலீசார், தந்தை ஷீனாவை கைது செய்தனர். கடந்த ஆண்டு, இதேபோன்ற சம்பவம் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் நடந்தது. அதாவது, கோழி கறி சமைக்க மனைவி மறுத்ததால் ஆசிட் குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.