90 ஆண்டுகளாக ஆடையே அணியாத விசித்திர கிராம மக்கள்..!! எங்க இருக்காங்க தெரியுமா..?

nude1 1663326403

உலகத்தில் சில கிராமங்கள் தனித்துவமான மரபுகளாலும், கலாச்சாரங்களாலும் பிரபலமாகின்றன. ஆனால் பிரிட்டனில் உள்ள ஒரு கிராமம், “நிர்வாண வாழ்க்கை” என்ற விசித்திர மரபை கடந்த 90 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.


பிரிட்டனில் ஹெர்ட்போர்ட்ஷையர் என்ற நகரம் உள்ளது. இதன் அருகே உள்ள கிராமத்தின் பெயர் தான் ஸ்பீல்ப்ளாட்ஸ் என்று பெயர். இது மர்மங்கள் நிறைந்த கிராமமாகும். நீண்டகாலமாக வெளியுலகிற்கு தெரியாமல் இருந்து வந்தது. இங்குள்ள மக்கள் 90 ஆண்டுகளாக ஆடை அணிவதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் ஆடைகள் அணியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் கிராமத்தில் நவீன வசதிகள் உள்ளன. பெரியபெரிய வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் நீச்சல் குளம், மதுக்கடை உள்பட பல சொகுசு வசதிகள் உள்ளன. மேலும் கிராமத்தில் ரூ.78.6 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள 2 படுக்கையறைகளுடன் கொண்ட பெரிய பங்களாக்கள் உள்ளன. இந்த கிராமத்தில் கடந்த 90 ஆண்டுகளாக ஆடைகள் அணிவதை தவிர்ப்பது இங்கு பாரம்பரிய மரபாக உள்ளது. இந்த மரபு இன்றும் கூட பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தை கடந்த 1929ம் ஆண்டில் சார்லஸ் மெக்காஸ்கி என்பவர் உருவாக்கினார். அப்போது இயற்கையான வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் எந்தவேறுபாடும் இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் ஆடைகள் அணிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார். இதையடுத்து தான் மக்கள் ஆடைகள் அணியாமல் இருப்பதை மரபாக பின்பற்றி வருகின்றனர்.

இத்தகைய விசித்திரமான கிராமத்துக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். தபால் காரர்கள், டெலிவரி பாய்கள் தினசரி வந்து செல்கின்றனர். இருப்பினும் அவர்களும் நிர்வாணமாக கிராமத்தில் வலம் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த கிராமம் குறித்து வெளியாகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதால், இது மீண்டும் ஒருமுறை உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

Read more: பேர கேட்டாலே நாவில் எச்சில் ஊறும்.. தினமும் புளி சாறு குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

Next Post

4-வது முயற்சியில் ராஜா ரகுவன்ஷி கொல்லப்பட்டார்.. 3 முயற்சிகள் தோல்வியடைந்தது ஏன்? போலீசார் விளக்கம்..

Fri Jun 13 , 2025
Police say Raja Raghuvanshi was murdered by his wife on the fourth attempt.
AA1GCqKb

You May Like