பயங்கரவாதியின் உடலில் கட்டியிருந்த குண்டுகள் வெடித்து சிதறிய பயங்கரம்.!! பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்..!!

பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டு வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில், திடீரென குண்டு வெடித்தது. பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக காவல்துறையினர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சேதமானது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 90 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 


அதேசமயம் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர். 

https://twitter.com/khurram143/status/1619982457973116929?s=20&t=GMgaOBGgUStfRpt-Xp763A

CHELLA

Next Post

”வந்தாச்சு புதிய வாக்காளர் அட்டை”..!! என்னென்ன அம்சங்கள்..!! எப்படி பெறுவது..?

Mon Jan 30 , 2023
வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்தார். வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே […]
”வந்தாச்சு புதிய வாக்காளர் அட்டை”..!! என்னென்ன அம்சங்கள்..!! எப்படி பெறுவது..?

You May Like