ராஜஸ்தான் மாநிலத்தின் சரிதா நகரில் அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம், சட்டவிரோத உறவும் மிரட்டல்களும் எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தனியார் நிறுவன கணக்காளரான ரேகா சர்மா என்பவரின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு கண நேர தடுமாற்றம், இன்று அவரை ஒரு கொலை குற்றவாளியாக மாற்றியுள்ளது. சக ஊழியரான விக்ரம் தாகூருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு பழக்கம் தான் இந்த அத்தனை பிரச்சனைக்கும் முக்கியப் புள்ளி.
ரேகாவுடனான ரகசியத் தொடர்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிய விக்ரம், தனது நண்பன் ராஜேஷுடனும் பழக கூறி ரேகாவை வற்புறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, ரேகாவின் அந்தரங்கக் காட்சிகளை ரகசியமாகப் படம்பிடித்து வைத்துக்கொண்டு, அதைக் காட்டிப் பணம் பறிக்கும் மிரட்டலிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். தன் குடும்ப மானம் மற்றும் சமூக அந்தஸ்து பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தவித்த ரேகா, இந்த தொல்லைகளிலிருந்து விடுபட ஒரு கொடூரமான முடிவை எடுத்தார்.
தனது கணவர் மற்றும் பிள்ளைகள் வீட்டில் இல்லாத ஒரு நாளை தேர்ந்தெடுத்த ரேகா, விக்ரம் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் சமரசம் பேசுவதாக கூறி தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர்களுக்கு மது விருந்து அளித்து, அவர்கள் போதையில் சுயநினைவை இழந்திருந்த தருணத்தில் இரும்புத் தடியால் அடித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கொலை செய்ததோடு நில்லாமல், சடலங்களை தனது வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டு, அதன் மேல் செடிகளை நட்டு எவ்வித அடையாளமும் தெரியாமல் மறைத்துள்ளார். ஆனால், சில நாட்களில் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து வீசிய கடும் துர்நாற்றம் பக்கத்து வீட்டாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. போலீஸார் நடத்திய சோதனையில், மாயமானதாக கருதப்பட்ட விக்ரம் மற்றும் ராஜேஷின் சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டன. இறுதியில் பிடிபட்ட ரேகா, “தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு அவர்கள் என்னை தள்ளியதால்தான் இந்தக் கொலையை செய்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Read More : விஜய் போட்ட பிளான் தோல்வி..!! பின்னடைவை சந்திக்கும் தவெக..!! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!



