மேலிடத்திற்கு திருப்தி இல்லையாம்..!! விரைவில் மாற்றப்படுகிறார் தமிழ்நாடு ஆளுநர்..? பரபரப்பு தகவல்..!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் பல மாதங்களாக வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவுடன், சில மணி நேரங்களிலேயே அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த மசோதா உடனடியாக அரசிதழில் வெளியிடப்படும் என்றும், உடனடியாக அமலுக்கு வந்தது என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் சூதாட்டம் நடத்தினால் 3 மாதம் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்ததால், அவர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. சமீக காலமாக ஆளுநரின் நடவடிக்கைகளில் பிரதமருக்கு திருப்தி இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, ஆளுநரிடம் சரியாக பேசவில்லையாம். மேலும், ஆளுநர் மாளிகையில் தங்குவதையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு விரைவில் ஆளுநர் மாற்றப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

CHELLA

Next Post

செல்போனை சார்ஜ் போடுவதால் டேட்டா திருடப்படுகிறது..!! உங்களால் நம்ப முடிகிறதா..? இனி எச்சரிக்கையா இருங்க..!!

Tue Apr 11 , 2023
வெளி இடங்களில் சார்ஜ் செய்தால், உங்கள் மொபைல்களில் உள்ள தகவல்கள் திருட்டு போகலாம் என சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோடைகாலம் வரும் நிலையில், பலரும் வெளியூருக்கு செல்ல திட்டமிடுவார்கள். அப்போது நிச்சயம் ஒரு கட்டத்தில் உங்களுடைய மொபைல்களுக்கு சார்ஜ் போட வேண்டிய சூழல் வரும். அப்படி சார்ஜ் போடும்போது உங்கள் மொபைல்களில் தகவல்கள் திருடப்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உங்கள் மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது, USB […]
mobile charging low battery phone charge by rawpixel cc0 via unsplash 1200x800 100761873 large

You May Like