மணமேடை காணாமலேயே மண்ணில் மறைந்த சோகம்..!! விஜயை பார்க்க வந்த திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழப்பு..!!

Karur 2025 2

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரத்தில், அண்மையில் திருமண நிச்சயம் முடிந்திருந்த ஒரு இளம் ஜோடி உயிரிழந்த சம்பவம், மிகுந்த உருக்கத்தை அளித்துள்ளது.


கரூரைச் சேர்ந்த 24 வயதான ஆகாஷ் என்பவருக்கும், 24 வயதான கோகுலஸ்ரீ என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு மேல் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருவரும் சென்றுள்ளனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, ஆகாஷ் மற்றும் கோகுலஸ்ரீ ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்குத் தயாராக இருந்த அந்த இளம் ஜோடி, மணமேடை காணாமலேயே ஒரே நேரத்தில் மண்ணில் மறைந்த இந்த துயரச் சம்பவம், இரு குடும்பத்தினரையும் உறவினர்களையும் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More : Arrest Vijay | விஜய்யை கைது பண்ணுங்க..!! நடிகை ஓவியா போட்ட பரபரப்பு போஸ்ட்..!! அடுத்த நொடியே நடந்த சம்பவம்..!!

CHELLA

Next Post

BREAKING | இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கரூர் விரைகிறார் விஜய்..? கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை..!!

Sun Sep 28 , 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் அடங்குவர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையே, தவெகவினர் யாரும் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாகவோ நிற்கவில்லை என […]
TVK Vijay 2025

You May Like