மக்களே உஷார்..!! ஓடும் மழைநீரில் மறைந்திருந்த பாதாள சாக்கடை..!! தவறி விழுந்த பெண்..!! பெரம்பூரில் பரபர சம்பவம்..!!

கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதில் மறைந்த பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்ணை அப்பகுதியில் மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காத்தனர்.


தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர். அந்த வகையில், பெரம்பூர் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த பகுதியில் சென்ற பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாரக்ஸ் சாலையில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்துள்ளார்.

மக்களே உஷார்..!! ஓடும் மழைநீரில் மறைந்திருந்த பாதாள சாக்கடை..!! தவறி விழுந்த பெண்..!! பெரம்பூரில் பரபர சம்பவம்..!!

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மக்களின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CHELLA

Next Post

உலகக்கோப்பை வரலற்றில் புதிய உலக சாதனை..!! அசத்திய விராட் கோலி..!! வாழ்த்தும் ரசிகர்கள்..!!

Wed Nov 2 , 2022
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி. டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2007ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 டி20 உலகக்கோப்பைகள் நடைபெற்று, தற்போது 8ஆவது உலககோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து டி20 உலககோப்பை தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 உலகக்கோப்பையில் […]
Virat

You May Like