காந்தி மீது பாஜக அரசுக்கு வன்மம்.. வறுமையை ஒழித்துச் சாதனை படைத்த தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது – CM ஸ்டாலின் கடும் கண்டனம்..!

mk stalin 2

வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது.. இந்த சட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது..


ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால், அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் வழங்குகிறது.. இந்த திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.. இந்த நிலையில் இந்த திட்டத்தின் பெயரை ‘ விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.. மேலும் மத்திய அரசு நிதியை 90%லிருந்து 60 ஆக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.. இதுதொடர்பாக புதிய மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய உள்ளது..

இந்த நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்! இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!

பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! 3 வேளாண் சட்டங்கள், சாதி வாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மகாதமா காந்தி 100 வேலை உறுதி திட்டத்தை சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

விருச்சிக ராசியில் குரு-சுக்கிரன் சேர்க்கை! இந்த 5 ராசிக்காரர்களுக்கு குபேர யோகமும் திருமண பாக்கியமும் கைகூடும்!

Mon Dec 15 , 2025
ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான மற்றும் செல்வாக்கு மிக்க கிரகங்களாகக் கருதப்படும் குரு மற்றும் சுக்கிரன், 2026 ஆம் ஆண்டில் ஒரே ராசியில் இணைகின்றன. இந்த அரிய கிரகச் சேர்க்கை ‘குபேர யோகம்’, ‘கஜலட்சுமி யோகம்’ அல்லது ‘சரஸ்வதி யோகம்’ ஆகியவற்றை உருவாக்கும், இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னோடியில்லாத மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த ராசிக்காரர்களுக்கு நல்வாய்ப்பு குரு கிரகம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி கடக […]
1652704136Which Zodiac Signs Handle Money Well

You May Like