374 ரன்கள் எடுத்தும் நெதர்லாந்திடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி..! உலகக்கோப்பை தகுதி சுற்று…

உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் நேற்றைய தினம் குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ப்ரண்டன் கிங்(76), சார்லஸ்(54), ஹோப்(47), நிக்கோலஸ் பூரன்(104), கீமோ பவுல் (46) ரன்கள் எடுத்திருந்தனர்.


375 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் வீரர்கள், யாரும் எதிர்பாராத விதமாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய தேஜா நிடமானுரு 76 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார், ஸ்காட் எட்வர்ட்ஸ் 47 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர், அதன்பிறகு வந்த வீரர்கள் நிதானமாக ஆடியதால் 49.5 ஓவர்களில் 374 ரன்கள் எடுத்தது, 1 பந்தில் 1ரன் வேண்டும் என்ற நிலையில் நெதர்லாந்து அணி 9வது விக்கெட்டை பறிகொடுத்ததால் ஆட்டம் ட்ராவில் முடிந்தது. உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தின் இந்த போட்டி முதல் முறையாக சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் வீரர் லோகன் வேன்பீக் 6 பந்துகளில் 30 ரன்கள் (4s-3,6s-3) எடுத்தார்.6 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்டிண்டிஸ் அணி 5 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத்தொடர்ந்து சூப்பர் ஓவர்களில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது நெதர்லாந்து அணி.

கடந்த போட்டியில் ஜிம்பாபே ஆணியிடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியிலும் நெதர்லாந்து அணியிடம் தோற்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகிறது.

Newsnation_Admin

Next Post

ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது...! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

Tue Jun 27 , 2023
பக்ரீத் பண்டிகைக்கு திருச்சியில் மாநகராட்சி அங்கீகாரம் இல்லாத இடங்களில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கக் கோரிய மனு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஒரு பொதுநல மனுவில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை உறுதி செய்வதற்காக, மாநில அரசு/கார்ப்பரேஷனால் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எந்த […]
ஆத்தாடி..!! ஒரு கிலோ கோழிக்கறி ரூ.700..!! கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்..!!

You May Like