சிறைச்சாலை என்றாலே இருட்டான அறை, மோசமான உணவு அசுத்தமான இடங்கள் தான் நம் நினைவுக்கும் வரும்.. சிறையில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களும் சித்ரவதைகளும் நடைபெறும் இடமாகவே நாம் கருதுகிறோம்.. அதனால் சிறை என்றாலே நம்மில் பலரும் பயப்படுகிறோம்.. ஆனால் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் ஆடம்பர சிறைகளும் இருக்கின்றன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. உண்மைதான், பல நாடுகளின் சிறைகள் மிகவும் ஆடம்பரமாக இருக்கின்றன.. இங்கு கைதிகளுக்கு பல வசதிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
பாஸ்டாய் சிறை, நார்வே
நார்வேயில் உள்ள பாஸ்டாய் சிறைச்சாலை ஆடம்பர சிறைச்சாலைகளில் ஒன்றாகும்.. இது ஆடம்பரத்தின் அடிப்படையில் முதலிடத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கைதிகளுக்கு காட்டேஜ் போன்ற வசதி உள்ளது. மீன்பிடித்தல் முதல் குதிரை சவாரி மற்றும் டென்னிஸ் விளையாடுவது வரை அனைத்தையும் கைதிகள் செய்கிறார்கள். அவர்களுக்கு சூரிய குளியல் எடுக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
HMP அடிவெல் சிறை, ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்தில் இதே போன்ற ஒரு ஆடம்பர சிறைச்சாலை உள்ளது, இது HMP அடிவெல் சிறை என்று அழைக்கப்படுகிறது. இங்கு கைதிகள் வசதியான படுக்கை அறைகள் வழங்கப்படுகின்றன. மேலும் பல்வேறு வகையான வேலைகள் இங்கு கற்பிக்கப்படுகிறது.
ஒட்டாங்கோ சிறை, நியூசிலாந்து
நியூசிலாந்தின் ஒட்டாங்கோ சிறையில் இருக்கும் கைதிகளும் ஆடம்பர வசதிகளைப் பெறுகிறார்கள். இங்கு கைதிகள் இலகுரக பொறியியல், பால் பண்ணை மற்றும் உணவு வகைகள் போன்ற வேலைகளை செய்ய வேண்டும்.. இது தவிர, கைதிகள் சாப்பிட ஒரு அழகான உணவுக்கூடமும் உள்ளது.
இந்தோனேசியா சொகுசு சிறை
இந்தோனேசியாவின் சொகுசு சிறையில் பெண்களுக்கு ஏசி, ஃப்ரிட்ஜ் முதல் சலூன்கள் வரை அனைத்து வசதிகளும் உள்ளன. இருப்பினும், இந்த சிறையில் இந்த வசதிகளுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது.
பாஸ்டன் டேல் சிறை, சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்தில் உள்ள பாஸ்டன் டேல் சிறைச்சாலையும் மிகவும் ஆடம்பரமான சிறைச்சாலைகளின் பட்டியலில் உள்ளது.. இங்கு ஒவ்வொரு கைதிக்கும் ஒரு தனி அறை உள்ளது. இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்கள் விருப்பப்படி ஒரு பாடத்தில் பட்டம் பெற்ற பின்னரே விடுதலையாகி வெளியே வருகிறார்கள்.
நீதி மையம் லியோபன், ஆஸ்திரியா:
இந்த ஆடம்பர சிறையில் கைதிகளுக்கு தனிக் குளியலறைகள், சமையலறைகள் மற்றும் தொலைக்காட்சிகள் கொண்ட அறைகள் வழங்கப்படுகிறது.. வன்முறை இல்லாமல் அமைதியாக வாழும் குற்றவாளிகளுக்கு வசதியான மற்றும் மறுவாழ்வு சூழலை மையமாகக் கொண்டுள்ளது.
அரான்ஜுஸ் சிறைச்சாலை, ஸ்பெயின்:
இந்த சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் தங்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, தொட்டில்கள், நர்சரிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற அம்சங்களுடன் பிணைப்பு மற்றும் பெற்றோருக்குரிய திறன் மேம்பாட்டை எளிதாக்குகிறது.
Read More : மனித ரத்தத்தில் இயங்கும் ஆபத்தான டேங்க்-ஐ உருவாக்கிய ஹிட்லர்? இந்த திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது?