காதலிக்குமாறு மாணவியை வற்புறுத்திய இளைஞர்!!! பெற்றோரின் செயலால் ஏற்பட்ட விபரீதம்..!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்தவர மணி(21) இவர் டிராக்டர் ஓட்டுநர், இவர் மடிகம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது, பொது இடத்தில் வைத்து காதலிக்குமாறு மணி தாக்கியதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் வேப்பங்குப்பம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, புகாரின் அடிப்படையில் மணியை விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது அவர் வீட்டில் இல்லை.


மேலும் மணி பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற பார்த்தபோது, பாட்டி வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மணி காவல்துறையின் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Newsnation_Admin

Next Post

வெளியானது துணிவு படத்தின் "Gangstaa" பாடல்...

Sun Dec 25 , 2022
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை […]
thunivu41

You May Like